Friday 2 February 2018

AGATHIYAR GEETHAM LYRICS

1.துவக்க பாடல் (கருணை விழியால்)

பல்லவி

கருணை விழியால் பதமலர் தருவாய்
சற்குரு நாதனே
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே
பொதிகை வாசனே

யாரப்பா … நீ கொஞ்சம் சொல்லப்பா
ஞானப்பா … உன் பிள்ளை நான் அப்பா
கருணா அருணா யோகத்தை வென்றாய்
குணநா குமரா இனிய தமிழால் இனத்தைக் காத்தாய்

கருணை விழியால் பதமலர் தருவாய்
சற்குரு நாதனே
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே
பொதிகை வாசனே

சரணம் 1

தீராத வினையாவும் தீர்த்தாய்
மாறாத இசையாவும் ஈன்றாய்
உனைப் போல் தெய்வம் வேறொன்று யார் சொல்லப்பா
பரமாய் அருளாய் தெளிவாய் முடிவாய்
இசையாய் இனியாய் செயலாய் வடித்தாய்
கதையாய் கனலாய் விடையாய் முடித்தாய்
ஓங்கார நாத

ஆசை கொண்டேன் அருகினில் நீ வா வா
ஓசை கொண்டு இசை தமிழ் நீ தாராய்
குருவே திருவே
அருவாய் உருவாய் வருவாய் அருள்வாய்
உன் பதமே பரமே
தாள்பணிந்து நின்றேன்
சரண் அடைந்து கொண்டேன்

கருணை விழியால் பதமலர் தருவாய்
சற்குரு நாதனே
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே
பொதிகை வாசனே

யாரப்பா … நீ கொஞ்சம் சொல்லப்பா
ஞானப்பா … உன் பிள்ளை நான் அப்பா
கருணா அருணா யோகத்தை வென்றாய்
குணநா குமரா இனிய தமிழால் இனத்தைக் காத்தாய்

கருணை விழியால் பதமலர் தருவாய்
சற்குரு நாதனே
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே
பொதிகை வாசனே

2.புகழ் பாடல் (ஞான ஒளியே)

பல்லவி

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமையின்றி வேறில்லை!

மலை வாசா
குகை வாசா
அகத்தில் உறையும் ஈசா
என்னை ஆண்ட குரு நீரே .... பிரம்மம் நீரே

மொழி ஆனாய்
விழி ஆனாய்
உயிரில் உயிராய் நின்றாய்
மறு ஜென்மம் இனி ஏது ... சர்வம் நீரே

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமையின்றி வேறில்லை!

சரணம் 1

தமிழ்மொழி முதன்மொழி இலக்கணம் படைத்தவர் நீரே …
தமிழ் ஞானி நீரே
பண்ணிரெண்டு ஆண்டுகள் சமுத்திர தவத்தில் ஆழ்ந்தாய் ...
மாச்சித்தன் ஆனாய்
சுவாசம் நீரே சுகமும் நீரே
சுடரும் நீரே சுமைதாங்கியே
மாளவனை ஹரணாய் வணங்கி வந்தாய்
ராமனுக்கு பானு மந்திரம் அளித்தாய்
உத்தமனாய் வாழ்வதற்கு சரியை கிரியை யோக ஞான
பாதைகளை அமைத்துத் தந்த
வழி காட்டி நீரே ... தலை வணங்கினேனே

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமையின்றி வேறில்லை!

சரணம் 2

பொதிகை மலையைக் குகனிடம் பெற்றவர் நீரே ...
பின் சஞ்சாரம் செய்தாய்
திருமறை காட்டில் தரணியை சமநிலை கொண்டாய் ....
இறைக்காட்சி கண்டாய்
புகழும் நீரே அருளும் நீரே
தயவும் நீரே கருணை நீரே
ராவணனை இசையில் மீட்டி வென்றாய்
ஆழி நீரை பருகி அனைத்தும் உண்டாய்
மொட்சமது புரிவதற்க்கு பெறுவதற்க்கு அருள்வதற்க்கு
சூட்சுமத்தை தெரிவித்த வழி காட்டி நீரே ...
தலை வணங்கினேனே

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமையின்றி வேறில்லை!

மலை வாசா
குகை வாசா
அகத்தில் உறையும் ஈசா
என்னை ஆண்ட குரு நீரே .... பிரம்மம் நீரே

மொழி ஆனாய்
விழி ஆனாய்
உயிரில் உயிராய் நின்றாய்
மறு ஜென்மம் இனி ஏது ... சர்வம் நீரே

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமையின்றி வேறில்லை!

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமையின்றி வேறில்லை!
உமையின்றி வேறில்லை!

3.பாராட்டுப் பாடல் (அறியா பயணம்)

அனு பல்லவி

அறியா பயணம் தொடர்ந்தோமே
நாம் இங்கே
அழியா நிலை பெற்றோமே
மௌன ஞானம் நீயும் அளிக்க
கருணை விழி நீ திறக்க
என்ன தவமோ என்ன வரமோ
உனது பதம் சரண் அடைய
ஈசா அகத்தீசா தரிசனம் நீ தந்தாய்

பல்லவி

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட
போற்றிட போற்றிட நோய் விலக
போற்றிட போற்றிட துயர் மறைய
அருள் பொழிவாய் குருவே

தந்தன தந்தன கவசமாய் நின்றிட
தந்தன தந்தன திரைவிலக
தந்தன தந்தன ஞானத்தை பெற
ஒளியாய் மாறினோம்

அறியா பயணம் தொடர்ந்தோமே
நாம் இங்கே
அழியா நிலை பெற்றோமே

அறியா பயணம் தொடர்ந்தோமே
நாம் இங்கே
அழியா நிலை பெற்றோமே

சரணம் 1

குரு நான் என்று அறிமுகம் செய்தவர்
ஊழ்வினையை அறிய செய்தாய்
யாகம் அதில் சுடர் ஒளியாய்
வினையாவும் நீயே ஏற்றாய்
ஞானம் அது வழங்கிட வந்தவர்
ஞான கோட்டம் வந்தமர்ந்தாய்
அன்னம் இட அமுத சுரபியாய்
பசியாவும் தீர்த்தாய்
இவ்வாழ்வின் பயன் கண்டோம்
இனி ஏது துயரம் அப்பா
உந்தன் நாமம் இங்குச் சொல்லச் சொல்ல
மனம் சாந்தம் நிரம்பி இங்கு வழியுதே
அட உன்மேலே ஆசை அப்பா
என் மெய் எல்லாம் குளிர்ந்ததப்பா
மதி நிறைந்து ஒளிர்ந்ததப்பா
நீயே பரமானந்தம்

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட
போற்றிட போற்றிட நோய் விலக
போற்றிட போற்றிட துயர் மறைய
அருள் பொழிவாய் குருவே

தந்தன தந்தன கவசமாய் நின்றிட
தந்தன தந்தன திரைவிலக
தந்தன தந்தன ஞானத்தை பெற
ஒளியாய் மாறினோம்

சரணம் 2

ஓர் மகனாய் உன்னிடம் வந்தேன்
சாலோக்கிய நிலை அறிந்தேன்
சரியை பின் கிரியை உணர்ந்தேன்
சாமீப்பியமாக நின்றாய்
யோகத்தால் அமுதம் பரவிட
சாரூப்பிய படி அடைந்தேன்
ஞானத்தின் கதவு திறந்திட இனி
சாயுச்சியம் எந்நாளோ
இந்நிலையை நான் அடைய
சற்குருவாய் வந்தாய் அப்பா
உன்தன் அழகை இங்கு ரசிக்க ரசிக்க
மனம் பரவசமாகி மகிழுதே
அட உன்மேலே ஆசை அப்பா
என் மெய் எல்லாம் குளிர்ந்ததப்பா
மதி நிறைந்து ஒளிர்ந்ததப்பா
நீயே பரமானந்தம்

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட
போற்றிட போற்றிட நோய் விலக
போற்றிட போற்றிட துயர் மறைய
அருள் பொழிவாய் குருவே

தந்தன தந்தன கவசமாய் நின்றிட
தந்தன தந்தன திரைவிலக
தந்தன தந்தன ஞானத்தை பெற
ஒளியாய் மாறினோம்

அறியா பயணம் தொடர்ந்தோமே
நாம் இங்கே
அழியா நிலை பெற்றோமே
மௌன ஞானம் நீயும் அளிக்க
கருணை விழி நீ திறக்க
என்ன தவமோ என்ன வரமோ
உனது பதம் சரண் அடைய
ஈசா அகத்தீசா தரிசனம் நீ தந்தாய்

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட
போற்றிட போற்றிட நோய் விலக
போற்றிட போற்றிட துயர் மறைய
அருள் பொழிவாய் குருவே

தந்தன தந்தன கவசமாய் நின்றிட
தந்தன தந்தன திரைவிலக
தந்தன தந்தன ஞானத்தை பெற
ஒளியாய் மாறினோம்

4.தாலாட்டுப் பாடல் (பாடவந்தேனே)

பல்லவி

பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எந்தன் ஈசனே

ஆரிரோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலாலோ தாலேலாலோ
அம்மாவின் கதைகேளு ஆரிராரோ
கண் மூடி நீ தூங்கு தாலேலாலோ

பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எந்தன் ஈசனே

சரணம் 1

தனிமையில் நீ ஓய்ந்திட
தாயாய் நான் வந்திட ......

தனிமையில் நீ ஓய்ந்திட
தாயாய் நான் வந்திட ...... மகனே வா...

மகனே வா.. என் மடியில் சாய்ந்திடு
உன் கண்ணீரை நான் துடைப்பேன் வந்திடு

குகன் வந்து கூறிட
தாய் பற்றை உணர்த்திட
இறை பெற்ற குழந்தையாய்
நீயே ஆனாய்

வட திசை உயர்ந்திட
தெற்கே நீ சென்றிட
சதுர் யுகம் கண்டிட
மாமுனியே நீ தூங்கு .....பாடவந்தேனே...

பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எங்கள் ஈசனே

சரணம் 2

தர்மத்தின் வழி சொல்ல
கர்மத்தை போக்கிட ....

தர்மத்தின் வழி சொல்ல
கர்மத்தை போக்கிட .... தவசீலா.......

தவசீலா... கானத்தில் மயங்கிடு
அழகா நீ கண்டிமூடி தூங்கிடு

உன்னைக் கண்டு கொண்டிட
மனதினில் நீ நின்றிட
நினைவினில் தோன்றிட
நீயே வந்தாய்

குறை ஒன்றை கூறிட
வரம் ஒன்று தந்திட
கரு என்னுள் மலர்ந்திட
நீயே என் மகனாக ... ஏங்கி நின்றேனே

பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எந்தன் ஈசனே

ஆரிரோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலாலோ தாலேலாலோ

அம்மாவின் கதைகேளு ஆரிராரோ
கண் மூடி நீ தூங்கு தாலேலாலோ

... அகத்தீசனே .... எந்தன் ஈசனே

5.மூல மந்த்ரா

ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோச்சனம்
ரோக அகங்கார துர் விமோச்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய கிரந்த கர்த்தாய நம

6.பாஜன் பாடல் (18 சித்தர் பாஜன்)

1.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ அகத்தியர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

2.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ வால்மீகி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

3.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ கருவூரார் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

4.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ மச்சமுனி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

5.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ திருமூலர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா 

6.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ கமலமுனி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

7.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ கோரக்கர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

8.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ தன்வந்த்ரி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

9.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ சிவவாக்கியர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

10.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ காலாங்கி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

11.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ பதஞ்சலி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

12.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ கொங்கணர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

13.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ பாம்பாட்டி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

14.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ குதம்பை ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

15.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ போகர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

16.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ புலிப்பாணி ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

17.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ இடைக்காடர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

18.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ சுந்தரானந்தர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா

ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஓம் நம ஓம் ஓம் நமஹ
ஸ்ரீ அகத்தியர் ஐயா ஓம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா