2016
I retired this year. I had all the time for Agathiyar now.
- My back pain reappeared after four years, but it was very much milder this time around. I was surprised by the arrival of Dhanvanthri through a devotee to treat my back pain that had reappeared. A couple who had just returned from Dhanvanthri's temple in India dropped in at my home promptly, bringing over his sacred prasad. Dhanvanthri used his sacred ash to rub it into my back and massaged me. He also told me to heat up some sesame oil, apply it, and sleep on level ground for the next few days. The pain eventually subsided, and one fine day it was gone just as it had come on.
2017
18.11.2017
- அருள் நிலைகள் பெற்றிருக்கின்றார் பல மாந்தரும். மாற்றங்கள் பலர் அடையக் காரணமாய் இருந்தாய். குவலயத்தில் ஒன்றுமே தெரியாதவன் போல் அமர்ந்திருப்பாய்.
Moving into 2018, Agathiyar put a stop to the rituals and charity that we were engaged with and had us go within, the first step towards walking the path of Gnanam. I had the pleasure of having Nadi readings from another Nadi reader, where Lord Muruga spoke.
30.1.2018
- Days before Agathiyar's Jayanthi, Lord Muruga, coming through the Nadi, said, "Son, I shall come into your home for the upcoming Guru Puja. Your home puja is a universal puja too. The Devas, Gnanis, Muktas, and Siddhas will come. Siva and Parvathy shall be there too. The Siddha Gnanangal will be there. I shall bring devotees to your home." Lord Muruga acknowledges that my ego died.
- மைந்தனே வரும் குரு நாளில் உன் இல்லத்து பூஜைக்கு வருவேன். உன் இல்ல பூசை இது உலக பூசை. உன் இல்ல பூசையைத் தீர்மானித்தாய். வரும் வியாழக்கிழமை அன்று ஆண்டு குரு பூசையைத் தீர்மானித்துள்ளாய். நன்றாக யாம் வருவோம். தேவர் வருவார். ஞானியர்கள், முக்தர்கள், சித்தர்கள் வருவார். அம்மை அப்பன் வந்து அங்கே அருளி நிற்பார். ஆகாய மார்கமாக சித்த கணங்கள் வரும். உன் இல்லத்தில் நடக்கின்ற பூசையில் உளமார முருகன் நான் இருப்பேன். ஏற்று உனக்குச் சார்ந்து இருந்து என்னைக் காட்டுவேன். நான் உன்னைச் சார்ந்து இருப்பேன். அன்று இயம்புவேன். மாந்தர் கூட்டத்தை அனுப்பி வைப்பேன். குட்டாட்டால் உன் இல்லம் மகிழ்ச்சி காணும். நான் என்ற அகம்பாவம் அழியக் கண்டேன். இன்னும் ஒரு வாக்கைச் சொல்கின்றேன். எனக்கு நீ ஆலயத்தை அமைக்க வேண்டும். நிற்கவே இம்மண்ணில் எந்தனுக்கு ஆலயமும் அமைத்து உள்ளார். என்னை வேறு விதமாய் காட்டித்தான் வைத்துள்ளார். என்னை நீ காட்டுகின்ற காட்சி வேறு.
1.2.2018
- நான் காட்சி கொடுத்தேன் ஷண்முக அவடையப்ப இல்லத்தில். அந்த இல்லத்தில் தேவர்கள் நாங்கள் விளையாடி நின்றோம். நன்றாய் ஆவுடையப்பன் உடலில் யாவரும் இறங்கி நின்றோம். அந்தப் பூசைக்குத் தேவர்கள், மூவர்கள், சக்தியர்கள், ஷண்முகன், கணேசன், சித்தர்கள், முக்தர்கள் யாவரும் வந்து புடை சூழ நின்றோம். அன்னவன் செய்கின்ற பூசையில் எல்லாம் அகத்தியர் முதல் சித்தர்கள் முருகன் யானும் வந்து அவனைச் சார்ந்திருந்து ஆசி வழங்கினோம். அன்னவன் ஆண்டு பூசையில் வந்திருந்தோம். அவனோடும் அருளோடும் விளையாடி நின்றோம். அவரது இல்லத்தில் விளையாடினோம். பெருமையாய் நேற்று நடந்தது அத்துனையும் பார்த்தாய். நாங்கள் வந்திருந்தோம். பரமேஸ்வரன் பரமேஸ்வரி தன்னை அழைத்து வந்திருந்தோம். வடிவேலன் இறங்கினேன் அவடையப்பனிடம். அற்புதமாகச் சித்தர்களும், முக்தர்களும் வந்தோம். அங்குதான் என்னுடைய விளையாடல் பார்த்தீர்.
- உனக்குத்தான் நித்திரை தவ வாசி காலம் வாசியும் சீர் பிசகி முடங்கித் தான் இருக்கு. சோர்ந்திடாது நீ திடங்கள் பெறுவதற்கு தீர்க்கமுடன் எங்களின் வாகடங்கள் சொல்வோம். சிறு வலியும் பொறுக்காத தேகம் அப்பா பிள்ளை உனக்கு வலி வருத்தம் இல்லாது சாத்மீக வாகடன்கள் சொன்னோம்.
- இந்தத் தேசத்தில் சத்தமின்றி அகத்தியரைப் பலருக்கு நீ காட்டினாய் அப்பா. உன் தொண்டை மெச்சுகின்றேன். நின் தேகம் தளருகிறது அப்பா. தேகத்திற்கு முதுமை அது வந்துவிட்டாலும் தெளிந்த ஒரு ஆத்மவுள் இருப்பது யானே. இந்தக் காலம் உன்னுடைய முதுகு எலும்பும் இடுப்பும் தானே ஒரு வித இறுக்கமாய் இருக்குதப்பா. அப்பா அங்கே இருக்கின்ற தைலம் தானே தைலமது உலர்ந்து போச்சு. இதுதான் உண்மை ஆதலால் சேரும் எலும்பு சந்திப்பெல்லாம் அறிவித்தால் ஒருவித இறுக்கம் அச்சு. ஆச்சப்பா மின்னல் போன்ற வலி தோன்றும். அங்கே அப்போது துடி துடித்து நிற்பான் மைந்தன். மைந்தனுக்கு மருத்துவம் சில செய்ததாலே மாற்றங்கள் கால் பங்கு குணமாகக் கண்டேன். சாற்றநல் இது எதற்கென்று கேள். அகத்தில் நீ அமர்ந்து தவம் தியானம் செய்ய. தெளிவிக்க அகத்தியரும் புறப்பட்டு விட்டார். திறம்படவே நீ நடமாட வேண்டும் அப்பா. தீர்க்கமாய் அதற்குத் தான் நூல் உரைக்க வந்தேன். ஆறுமுகன் சொல்லுகின்றேன் ஷண்முகத்திற்குக் கூறுகின்றேன் உன்னால் எழுந்து நடமாட முடியும். குமரனும் இன்று இரவே அற்புதம் செய்வேன். மெள்ள அகத்தியர் வனம் அகத்தியர் தபோவனம் ஆகும். தவம் செய்யும் வனம் அப்பா தபோவனம் ஆகும்.
- செய்தித்தேன் மருத்துவம் யான் கூட நேற்று. மெய்யாக அவன் வலியைப் போக்கினேன். ஜீவ நூலாய் ஜீவனாய் இறங்கி பங்காக அவன் உடலைச் சார்ந்திருந்தது அவனுக்குச் சிகிச்சை செய்தோம். ஆறுமுகன் பேசினேன் இறங்கினேன் ஒரு கணத்தில். நன்றாய் மயில் இராகு கொண்டு சண்முகத்தின் தேகத்தை தடவிய அவன் வலியைப் போக்கினேன். மைந்தனவன் தியான வழி சிந்தைகொள்ள அவன் தனக்கு சக்தி பெருகும்.
2019
3.1. 2019
- எனக்குச் செய்யும் பூசை கண்டு மயங்கித் தவத்தொரும் சித்தர் எல்லாம் தடம் நாடி வந்தோம். தடம் அதனில் அற்புதங்கள் அதிசயங்கள் நிகழும். நாடி மாந்தர் பெரும் கூட்டம் கட்டுக்கடங்கா. நாள் அதன் பின் தனி கோட்டம் அமைப்போம். நன்றாம் மண்ணுலகில் உன் கோட்டம் பிரபலியம் ஆகும்.
- மும்மலங்கள் அற்றதொரு தேகம் என்பதனால் முனை திறந்து உட்சியும் திறந்து குண்டலினி உயர்ந்து கனல் எழும்பி அமிர்தத்தை இடைவிடாது உண்டு கொண்டு இருக்காய். குண்டலினி சக்தியெல்ல்லாம் எழுப்புவதெல்லாம் குவலயத்தின் பாம்பின் போன்று நெளிய நேரும். ஆனால் ஆனந்தம் ஆனந்தம் அதுதான் என்போம். நீ உள்ளே அமைதியுடன் இருந்து தான் ஆர்ப்பாட்டம் இல்லாது இருப்பாய். மூப்பான நிலை வந்ததால் முனை திரண்டு பேசி நிற்போம் நாங்களும் தான். உன்னுள்ளே நாங்கள் இருந்தவாறு உபதேசம் அளிப்போம். பலவாறாக நீ உரைக்கும் வார்த்தையெல்லாம் எங்கள் சிந்தை அப்பா. உன்னுள் இருந்து நாங்கள் மாந்தர்க்கு நலம் ஞானம் வழங்குவோம். உன்னுள் ஜீவமாய் இருக்கின்றோம்.
This is the third instance they spoke about the Kundalini.
29.11.2019
- அருட்பெருஞ்சோதி ... வாரும் ஐயா … அருட்பெருஞ்சோதி ஆட்கொண்டானப்ப ... மற்றவர்களும் வாரும் ... உங்களையும் ஆட்கொண்டானப்ப … உங்கள் ஆத்மவை திறந்து வையுங்கள் ... உங்கள் இதயத்தைத் திறந்து வையுங்கள்... ஜோதியினை உன்னுள் பதிந்தது. ஜோதியினை நீ இணைந்து விடு. ஜோதியினை பிரகாசிக்கச்செய். ஆழ்ந்து போ. அனைவரும் ஜோதிக்கு அடிமை. அடியேனும் அடிமை.
This was the very first time we got to know what a Pranava and Oli Degam would be like for the devotee, in whom Ramalinga Adigal came, was lifted off the floor, and we had a tough time holding him back. We saw Ramalinga Adigal's desire and wish to see us attain his state too, calling out to Arutperunjothi to shower his grace and bless us.
This reminds us of Tavayogi's writings on gravity. As science says that we and everything else on the face of the earth are subjected to the pull of gravity exerted from its center, so too man is subjected to this force within his body. And by transforming his body chemically, he breaks loose from its force, he breaks loose from its hold, he is space-borne and free. And he is free and liberated. As one energy form is converted to another, so too the gross body is transformed into a body of light.
பூமியின் ஈர்ப்புச் சக்தியான மையப் பகுதியைக் கடந்து எந்த ஒரு பொருளோ புவி ஈர்ப்புத் தன்மைக்கு அப்பால் சென்றால் அது வெட்டவெளியில் சுதந்திரமாக மிதக்கிறது என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதேபோல் மனிதனும் தன்னை கீழ்நோக்கி இருக்கும் மூலாதார சக்தியை மேல் நோக்கிச் செலுத்தினால் பிண்டத்தின் ஈர்ப்புச் சக்தியைக் கடந்தால் மனிதனும் வெட்டவெளியில் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் மனிதன் உடலில் இருக்கும் வரை மேல்நோக்கிப் பயணம் செய்ய முடியாது. ஆகவே பஞ்சபூத உடலை வேதியியல் மாற்றத்தால் மாற்றி மூல அணுவாக மாற்றிப் புவியீர்ப்புக் கோட்டை கடந்து வெட்ட வெளியில் சேர்ந்து சுதந்திரமாக உலாவுவதே ஞானம் ஆகும். அதுவே சொரூப சித்தி எனப்படும். அதைப் போதிப்பதுதான் சித்தர் நெறி.
24.12.2019
- அசுத்த தேகம் சுத்த தேகமாகி பிரணவ தேகமாகி ஒளி தேகமாகும் வித்தையே ஞானம். அதற்குத் தியானத்தில் வாசியைக் கவனி. உடல் குறு தத்துவங்களை அறிய வேண்டும். இதுநாள் வரையில் நீ கடந்து வந்தது இவ்வுலக வாழ்க்கையின் பயணம். இனி நீ கடக்க போவது உமது உல் பயணம். ஆதாவது நீ பிறந்ததன் நோக்கம் அறிவாய். உமது மூச்சி உனது சுழுமுனை தொட்டு உமது ஏழு சக்கரங்களில் பயணம் செய்யும் கால் ஏழாவது சக்கரம் தொடும் நிலையில் நீ உனது பிறவிக்கான பலனை அறிவாய். உனது நிலையை நீ தொடும்போது அக்கணம் உன்னை அறியாமல் உன்னை நோக்கி ஒரு சக்தி உன்னுள் இறங்கும் - அதுவே சுழிமுனை. நீங்கள் உள் பயணிக்கும்போது எல்லாம் தெளிவாகத் தெரியும் சமயம் திரை விலகியத்திற்கு அர்த்தம். அதுதான் ஞானம். இத்தருணம் உமக்கு மூலாதாரம் திறந்தது, ஸ்வாதிஸ்டானம் திறந்தது. இப்பொது மான் மூச்சி குளத்தில் இருக்கிறது. அவை திறக்கும் தருணம் வந்தது. இப்போதுதான் நீ உமது பயிற்சியினை தொடங்க வேண்டும். இந்த நிலையில் அச்சக்கரம் முற்றும் திறந்துவிடும். உடலில் பல மாற்றங்கள் கண்டறிவாய். பயம் கொள்ள வேண்டாம். இச்சக்கரங்களில் புணர்ச்சியால் உன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் துர் நாற்றம் வீசும், மலச்சிக்கல் ஏற்ப்பட்டு கழிவு ஆகும், சிறுநீர் அதிகம் வெளியேறும். அன்று நீ உண்ட குழம்பினாள் உன் உடலிலிருந்து வாதம், கபம், பித்தம் சற்றே அகன்றது. இன்னும் இருக்கிறது. அவை அகலும்.