Friday 17 October 2014

A PRAYER

Agathiyar at Nadi Guru Selvam's centre. Photo courtesy of Jnana Jyothi Amma

என் உடல் என்னும் பம்பரத்தில் 

உயிர் என்னும் கயிற்றைக் கட்டி 

வினை என்னும் ஆட்டக்காரன் 

ஆட்டுவிக்கிறான் 

இறைவா எம்பிரானே அகத்தீசா 

வினை அறுக்க உன்னையே சரணடைந்தேன் 


போற்றினால் உனது வினை அகலுமப்பா 

போற்றினால் பூரணமும் குடப்பேசும் 

என்று சொன்னவனும் நீ தானே 

ஆகவே உன்னையே சரணடைந்தேன் 


நான் விடுகின்ற மூச்சும் நீயே 

என் உடலும் நீயே உயிரும் நீயே 

கூட்டுவிப்பவனும் நீயே குலைவிப்பவனும் நீயே 

ஆட்டுவிப்பவனும் நீயே பெருமானே 


இனி பிறப்பு வேண்டாம் எங்களுக்கு 

ஒரு வேளை பிறப்பு இருக்குமானால் 

அப்பிறப்பில் உனக்கு தொண்டு செய்யும் 

பாக்கியத்தைக் கொடுத்தருள்வாயாக அகத்தீசா