Saturday 10 January 2015

KALLAR VIZHA PART 2






Bala Chandran Gunasekaran who attended the Agathiyar Jayanthi & Guru Puja celebrations at Kallar with Surendaren Selvaratnam and Dyalen sent be the following document by Siddha Practitioner R. Supramanian of the Ramana Siddha Vaidyasalai on the benefits of the 111 herbs that were gathered and used in the Sarva Dosa Nivarana Maha Yagam which was the highlight of the two day festivities.

Read further, 

ஸ்ரீ அகத்தியர் ஞானபீட 12-ஆம் ஆண்டு குருபூஜை விழா 
சேகரிக்கப்பட்ட மூலிகைகளின் விபரங்கள்

1/8/2015 

ரமணா சித்தவைத்தியசாலை 
சித்த மருத்துவ மாமணி இரா.சுப்ரமணியன்

ஓம் அகத்தீசாய நம 

முன்னுரை

மூலிகை உலகில் எல்லா தாவரங்களுக்கும் தனிப்புகழ் என்றென்றும் உண்டு. ஒவ்வொரு மூலிகையும் அதனதன் குணாதிசயங்களில் என்றுமே மாறாமல் இருந்து வருகிறது. 

எந்த ஒரு மூலிகையை நமது பாட்டனார் பயன்படித்தினாரோ அதே மூலிகையை அவர் பேரனும் நாமும் பயன்படுத்தும்போது அதே குணத்தையும், பயனையும் மாறாமல் தருகிறது. 

மனிதனின் எண்ணங்கள, சொல், செயல் யாவும் காலத்துக்கு காலம், நாளுக்கு நாள், நிமிஷத்துக்கு நிமிஷம், வினாடிக்கு வினாடி மாறுகிறது. பகுத்தறிவுள்ள மனித இனம் இப்படி மாறுபட்ட வாழ்கை நடத்தும் போது இடம் விட்டு இடம் பெயர்ந்தும் நடமாடாது வளரும் குணம் மாறாத மூலிகை இனங்களிளிருந்து நாமறியவேண்டியது ஏராளம், நிறைய உள்ளது. 

தனிச்சிறப்பு வாய்ந்த அறிய மூலிகைகளை நாம் கானகத்திலிருந்து கொணர்ந்து இச்சர்வ தோஷ நிவாரண யாகத்திலிடுவதற்கு உரிய ஞானம் வழங்கிய ஸ்ரீ அகத்திய மகாமுனிக்கும், அவர் குரு ஸ்ரீ சுப்ரமணியருக்கும் முதல் வணக்கத்துடன் ஆரம்பிக்கிறோம்.

மூலிகைகளின் பெயர் விபரங்கள்

இறவா கலையின் புகழ் பெற்ற மூலிகைகள்


1. மஞ்சள் கரிசலாங்கண்ணி 

2. பேய் மிரட்டி 

3. கழற்சிக்கொடி 

4. அந்திமந்தாரை 

5. அகரம் புல் 

6. மலை அகத்தி எனும் சீமை அகத்தி 

7. கஞ்சாங் கோரை எனும் நாய்த்துளசி 

8. பேய்ச் சுரைக்கொடி 

9. ஆதி நாராயணன் எனும் வாதமடக்கி 

10. கல்யாண முருங்கை 

11. சீதேவி செங்கழுநீர் 

12. அரசு 

13. பற்பாடகப் புல் 

14. கீழா நெல்லி 

15. சித்தர் மூலம் 

16. தும்பை 

17. எட்டி 

18. மூக்கிரட்டை 

19. பூனை வணங்கி 

20. வேலி பருத்தி எனும் உத்தம மகானி

21. மருதோன்றி 

22. நொச்சி

23. நாக முஷ்டி 

24. வலம்புறிக் கொடி 

25. ஆம்பிரம் எனும் மாமரம் 

26. அசோக மரம் எனும் நெட்டிலிங்கம் 

27. தேள் கொடுக்கு எனும் சுடுகாடு மீட்டான் பச்சிலை 

28. நாயுருவி 

29. கருஞ்செம்பை 

30. சிவக்கரந்தை 

31. மாவிலங்கம் 

32. வன்னி 

33. நரிமிரட்டி 

34. கொன்றை 

35. நாவல் 

36. மிளகாய்பூண்டு 

37. விளாமரம் 

38. வேங்கை 

39. அத்தி 

40. நுணா எனும் நோனி 

41. துத்தி 

42. கருவீழி 

43. கருங்கொடி வேலி 

44. குழலாதண்டை 

45. ஏறுசிங்கி 

46. பொன்வண்ணச் சாலி 

47. கல்தாமரை. 

48. சேந்தாடு பாவை 

49. மயுரசிகை 

50. புரசு 

51. ஆவாரை 

52. மூவிலை குருத்து 

53. தொழுககன்னி 

54. நத்தை சூரி 

55. கருடக்கொடி 

56. பொற்சீந்தில் 

57. ஜீவ கரந்தி 

58. தொட்டால்சிணுங்கி 

59. புளிநாறை 

60. ஏழிலை பாளை 

61. புல்லுருவி 

62. கோடக்சாலை 

63. பூவரசன் 

64. ஆடாதொடா 

65. ஜலதிரண்டி 

66. மலைச்சுண்டை 

67. கவிழ்தும்பை 

68. சிறு கண்ணுப்பீளை 

69. ஒதியம் எனும் வெண்மருது 

70. இத்தி 

71. சந்தனம் 

72. தலைச் சுருளி 

73. மிளகரணை 

74. செவ்வியம் 

75. காட்டத்தி 

76. ஆல் 

77. மலை வேம்பு 

78. கருநீலி எனும் வண்ணான்சாலி 

79. புங்கன் 

80. முட்சுங்கன் 

81. இண்டு எனும் இம்புறா 

82. தவசு முருங்கை 

83. விழுதி 

84. கருந்தும்பை 

85. கல் அத்தி 

86. ஆத்தி 

87. பூலாத்தி எனும் பூவில்லா அத்தி 

88. சிறுகுறிஞ்சான் 

89. பலா 

90. வேம்பு 

91. அருகம்புல் 

92. சிவனார் வேம்பு 

93. தான்றிக்காய் 

94. ஐவிலை குருந்து 

95. வெட்பாலை 

96. தைவேளை 

97. நாரத்தை 

98. மகிழம் 

99. இலுப்பை

100. ஊசித்தகரை 

101. தேவதாரு 

102. அகில் 

103. செண்பகம் 

104. கிருஷ்ண பச்சை 

105. விஷ்ணு கிரந்தி 

106. விராலி 

107. அழிஞ்சில் 

108. பேய்புடல் 

109. திரிசங்கு 

110. கருநெல்லி 

111. மூங்கில் பிரண்டை

மூலிகைகளின் பயன்கள்

1.மஞ்சள் கரிசலாங்கண்ணி 
எந்த காமாலைக்கும் அடங்காத காமாலை நோயை குணமாக்கும் தன்மை உடையது. 

2.பேய் மிரட்டி 
இதன் இலையை காஷாயமிட்டு பருக கண மாந்தம், பேதி, வயிற்று நோய் தீரும். 

3.கழற்சிக்கொடி 
இலை பருப்பினால் விதை வாதம் எனும் ஏரண்டம், இறகண்டம், தசையண்டம் போன்ற வாத வீக்கங்கள் கரையும். 

4.அந்திமந்தாரை 
வெளிப்புற கட்டிகள் பழுத்து உடையவும்,சொறி சிறங்குகளுக்கும் தீர்த்திடும் அருமருந்து. 

5.அகரம் புல் 
வெட்டுக்காயம், அடிபட்டு சதை கிழிந்து ரத்தம் வடியும் காயங்களை விரைவில் குணமாக்கிவிடும். 

6.மலை அகத்தி எனும் சீமை அகத்தி 
சர்ம நோய்களான படை, மேக ஊறல், தடிப்பு, நமைச்சல் ஆகியவற்றை நீக்கும். 

7.கஞ்சாங் கோரை எனும் நாய்த்துளசி 
உடம்பிலும் மர்ம ஸ்தானங்களில் உருவாகும் ஒருவகை பேன் போன்ற அழுக்கு உண்ணிகளை அடியோடு ஒழிக்கும். 

8.பேய்ச் சுரைக்கொடி 
கடுமையான விஷத்தை கக்கும் எந்த வித விஷ கடிக்கும், விஷம் தணிக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. 

9.ஆதி நாராயணன் எனும் வாதமடக்கி 
இதன் இலைகளை கஷாயாமாக்கி பருகிவர வயிற்றின் கழிவுகளை நீக்கி, வாத, வாய்வு தொந்தரவுகளை வராமல் செய்திடும். 

10.கல்யாண முருங்கை 
இலைசாற்றை காலை மாலை பருக மாதாந்திர முன் பின் காணும் வயிற்று உபாதைகளை நீக்கிடும். 

11.சீதேவி செங்கழுநீர் 
மேக ரோகத்தால் உண்டாகும் சொறி, சிரங்கு, தேமல், படை, சரும வெடிப்பு நீங்கும். 

12.அரசு 
இதன் இலை, பட்டையை கஷாயாமாக்கி பருகிவர தொண்டைக்கட்டு, குரல்வளை சம்பந்தமான நோய்கள் விலகும். மழையை வருவிக்கும் தன்மை கொண்டது. சந்தான பாக்கியம் கிட்டிட செய்யும். எதிர்மறையான தோஷங்களை நீக்கும். 

13.பற்பாடகப் புல் 
எல்லாவித சுரங்களையும் கூட்டு மருந்தினில் தணிக்கும். 

14.கீழா நெல்லி 
முறைப்படி சாப்பிட்டு வர காமாலை,மாலைக்கண் பார்வை மங்கல், கண்ணில் புகைப்படலம் தோன்றுதல் நீங்கும். 

15.சித்தர் மூலம் 
காக்கை வலிப்பு, இழுப்பு நோய் நீங்கும். 

16.தும்பை 
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகள்,மந்தம்,கபம் நீங்கும். 

17.எட்டி 
வாந்திபேதி, விஷசுரம், காலரா போற்றவற்றை நீக்கும். 

18.மூக்கிரட்டை 
இதன் இலையினால் மலசிக்கல் தீரும்.நீ ர்த்தேக்கத்தை வற்ற செய்யும். 

19.பூனை வணங்கி 
பவுந்திர நோய்கள் பூண்டோடு அழிக்கும் அருமருந்தாகும். 

20.வேலி பருத்தி எனும் உத்தம மகானி 
சூதக நோய், கர்ப்பபை கோளாறுகள் சகல வாய்வுகளுக்கும் இதன் பயன் அபாரமானது. 

21.மருதோன்றி 
கரப்பான், புண்கள், வீப்பிங் எக்ஸிமா எனும் நீர் ஒழுகும் கரப்பானையும் குணமாக்கும். மங்கையரின் சுரோணித தோஷங்களும், அக்கி மற்றும் இரத்த பித்தமும் குணமாகும். 

22.நொச்சி 
குருதி போக்குடன் கூடிய பேதி, வாந்தி உடனடியாக நின்றுவிடும். 

23.நாக முஷ்டி 
இதன் வேர் கொண்டு சர்ப்பத்தை சரணடைய செய்யலாம். விர்பத்தினால் ஏற்படும் கொடிய நச்சினையும் நீக்கி குணப்படுத்தும் அபூர்வ மூலிகை. பிரதி பௌர்ணமி தினத்தில் வழங்கும் சர்க்கரை நோய் தீர்க்கும் மூலிகை மருந்தில் இதுவும் சேர்க்கப்படுகிறது. அன்றைய தினம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 

24.வலம்புறிக் கொடி 
இருமல், நீரைடைப்பு, ரச பாஷான மருந்துகளால் உண்டான வேக்காடு, வாய்ப் பிடிப்பு நீங்கும். 

25.ஆம்பிரம் எனும் மாமரம் 
சர்க்கரை நோயில் உள்ள அதிக சர்க்கரையை அழிக்க வல்லது. நீரிழிவு, அதிகமாக நீர் பிரிவதை தடுக்கும். 

26.அசோக மரம் எனும் நெட்டிலிங்கம் 
மாதர்களின் கருப்பை கோளாறுகளையும் கற்பசூலை, கற்ப வாய்வு வலி நீங்கி பெண் மலட்டு தன்மையை நீக்கி சந்தான. 

27.தேள் கொடுக்கு எனும் சுடுகாடு மீட்டான் பச்சிலை 
சீழ் வடியும் காதில் இதன் இலைசாற்றை கசக்கி பிழிய துர்வாடையுடன் வடியும் சீழ் நீற்கும். கண்ணில் விட கண் சிவப்பு நீங்கும். தேள்கடி விஷமிறங்கும். 

28.நாயுருவி 
நாட்பட்ட பேதி ரத்தபேதி, பற்பொடியினால் பல் சம்பந்த உபாதைகளை நீங்கும். 

29.கருஞ்செம்பை 
அடிபட்ட காயம், இரும்பினால், விபத்தினால் ஏற்படும் சதை கிழிச்சலை ஆற்றிடும் ஆச்சர்ய குணம் கொண்டது. 

30.சிவக்கரந்தை 
நீற்றுப்போன தாதுவை கட்டும் போக இச்சையால் மன நிறைவை உண்டாக்கும். 

31.மாவிலங்கம் 
குழந்தைப் பேறு வேண்டாமென கருதுவோர் இதனை பயன்படுத்தி இயற்கையாக தடுத்துக்கொள்ளலாம். 

32.வன்னி 
பாம்புக்கடி, இடுமருந்து விஷமும், உணவு குற்ற ஆகிய விஷத்தை முறிக்கும். 

33.நரிமிரட்டி 
வாயில் கோழை வடிதல், அதிக வாய் ஊறுதல் அடங்கும். 

34.கொன்றை 
ஆஸ்துமா சளி, கப இருமலை கட்டுப்படுத்தும். 

35.நாவல் 
சிறுநீரில் அதிக சர்க்கரை சத்து குறைந்து அதிமூத்திரம் குறையும். 

36.மிளகாய்பூண்டு 
இரத்தத்தில் கொழுப்பினை வெகுவாய் குறைத்திடும். இரத்த ஓட்டத்திக்கு சீரான வெப்பம் அளித்து சீர்படுத்திடும். தேவையற்ற கட்டிகள் கரையும். 

37.விளாமரம் 
இக்கனிமேல் இச்சை வைக்கின் போகம் என்ற கனிமேல் இச்சை போகாது என்பர். கல்லீரல், மண்ணிரல் கோளாறுகளை களையும். இதன் ஓடு காம இச்சையை தணிக்கும். 

38.வேங்கை 
சீழ் கொண்ட ரணங்கள் மேல் தூள் கலந்து போட ஆறும். 

39.அத்தி 
இதன் பழம் இரத்த விருத்திகளும், இலையின் தளிர் கற்பபை பலப்படவும் செய்திடும். 

40.நுணா எனும் நோனி 
இதன் பழத்தின் சாரிலிறிந்துதான் நோனி எனும் பழப்பானம் கடைகளில் விற்கிறது. இலை கஷாயத்தில் மலசிக்கல் விலகும். 

41.துத்தி 
வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள வேக்காடு, புண், மூல உபாதைகள் மலசிக்கல் தீரும். 

42.கருவீழி 
ஜீவசக்தி நிறைந்த மூலிகை.இது மூளை சுக்கிலம், எலும்பு, தசை, இரத்தம், நரம்பு, தோல் இவைகளுக்கு என்ன சக்தி தேவையோ அதை ஊட்டும். 

43.கருங்கொடி வேலி 
வெண்மையான ரோமம் கருவண்டு போல் ஆகும். சிவந்த மேனியும் வஜ்ரம் போன்ற உடல் பலமும் அளிக்கும். செம்பை நீற்றும். 

44.குழலாதண்டை 
ரசம் இதன் சாற்றில் கட்டும். ரச குளிகை, ரச பஸ்பம் இதன் மூலம் செய்யலாம். 

45.ஏறுசிங்கி 
இதனை முறைப்படி செய்து வடுக பைரவர் மந்திரம் பூஜை செய்து நெற்றியில் திலகமிட்டால் சில வசியங்கள் செய்யலாம். 

46.பொன்வண்ணச் சாலி 
காயகற்ப மூலிகையாகும். இதனை முறைப்படி உட்க்கொள்ள யானைப் போன்ற வலிமையையும், கருவண்டினை யொத்த உரோமம் பெறலாம் என காலங்கி நாதர் மலைவளம் எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது. 

47.கல்தாமரை
காயகற்ப மூலிகையாகும். இதனை முறைப்படி, வரிசை கிரமப்படியும் சாப்பிட்டு வர இதன் பலனை வாயால் சொல்லமுடியாத அற்புதமானது. இரும்பை செம்பாக மாற்றும் தன்மையுள்ள மூலிகை என கோரக்கர் மலைவாகடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

48.சேந்தாடு பாவை 
இது ஒரு தெய்விக மூலிகை. இதன் சக்தி அளவுகடந்தது. இதை வைத்து ஒன்பது பாஷானங்களை தனித்தனியே கட்டலாம். ஒன்றாகவும் கட்டலாம். ஸ்ரீ போக மாமுனிவரால் நவபஷானத்தால் உருவாக்கப்பட்ட பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலை இம்மூலிகை சாற்றால் கட்டி செய்யப்பட்டது. கடும்பத்தியதுடன் கர்ம சிரத்தையுடன் இதனை உட்கொண்டால் சகல ரோகமும் தீரும். ஆனால் இதனை உட்கொள்ள இறைவனின் அருட்கிருபை வேண்டும். 

49.மயுரசிகை 
சர்வ ஜன வசியத்துக்கும். பிற மருத்துவ மருந்துகளுடன் கூட்டாகவும் சேர்த்து நோயின் தன்மையை தவிர்க்கலாம். 

50.புரசு 
அதிக வீரியமுடையது. தாளாக சுண்ணம் செய்ய பெரிதும் பயன்படுகிறது. 

51.ஆவாரை 
மதுமேகம், தந்தி மேகம், சுக்கில மேகம், மேக வெட்டை, வெள்ளை மற்றும் பிற மேகம் தீரும். 

52.மூவிலை குருத்து 
அப்பிரகம் இதில் பஸ்பமாக்கலாம். கற்ப மூலிகை அப்பிரகத்திலிருந்து ரச வைப்பு செய்யலாம். 

53.தொழுககன்னி 
வடமொழியில் சாவால்ய கரணி எனப்படும்.துண்டிக்கப்பட்ட உடல் பாகத்தை ஓட்ட வைக்கும் சக்தியுடையது. இதனை உட்கொள்ள பதினாறு வயது குமாரனாகவும், மதயானையைப் போன்ற அபார வலிமையையும் பெறலாம் என காலங்கிநாதர் மலைவளம் எனும் நூலிலும் குறிப்பிட்டுள்ளார். இராமாயணத்தில் ஸ்ரீ ஹனுமான் இந்த சஞ்சீவி மூலிகை தேடி கிடைக்காமல் காலம் கருதி மலையையே பெயர்த்து எடுத்து வந்தது பற்றி கேட்டிருப்போம். 

54.நத்தை சூரி 
எத்தை சொன்னாலும் அத்தை செய்யுமாம் நத்தை சூரி. நத்தை சூரிக்கு இந்த தாரணியில் சாபமில்லா மூலிகை என்று கருவுரார் பலதிரட்டு தனது நூலில் தெரிவித்துள்ளார்.இதை முறையாக உட்கொண்டால் தேகம் இருகும். மலையையும் உடைக்கும் சக்தி கிடைக்கும். அரும் குரு மருந்து. 

55.கருடக்கொடி 
சகல விஷ ஜந்துக்களின் விஷத்தைப் போக்கும் அற்புத மூலிகையாகும். இன்னும் அநேகம் உள்ளது. 

56.பொற்சீந்தில் 
மூலிகையில் சாகா மூலி என்று இதற்க்கு பெயருண்டு. இதில் வெண்மையான சர்க்கரை சத்தை பிரித்து எடுக்கலாம். குரு மருந்தாகவும், இணை மருந்தாகுவும் பயன் படுத்தலாம். இதை முறையாக உண்டால் மேகம், வாத பித்தம், கபால வெட்டை, அத்திசுரம் ஆகியவை தீரும் எனவும், தாது விருத்தியும் மற்றும் உடல் பலமும் கூடும் என நந்தீசர் தனது சர்வ கலைஞானத்திலும், சட்டைமுனி தனது கற்பவிதி நூலிலும் கூறியுள்ளார். 

57.ஜீவ கரந்தி 
இது ராஜ மூலிகை வகையை சேர்ந்தது. இதில் தாளாகம் உருகி கட்டும். வாழ்நாளை நீட்டிக்க செய்யும். 

58.தொட்டால்சிணுங்கி 
தாதுவை வலுவேற்றவும், இராஜ வைத்திய முறைப்படியும் பயன்படுத்தலாம். 

59.புளிநாரறை 
இதன் கிழங்கு கொண்டு மூலத்தில் நவ வியாதியையும், வேறோடும் குணமாக்கலாம். செம்பை பொன் போல் பளபளப்பாக்கும் தன்மை கொண்டது. 

60.ஏழிலை பாளை 
எங்குமே காணக் கிடைக்காத மிக அறிய தோல்நோய் நீக்கி இது. 

61.புல்லுருவி 
இது புளிய மர புல்லுருவி.இது மிக கடினமான மூலிகை. ஓடிக்கவோ, பிரிக்கவோ முடியாத அளவுக்கு வலுவான தன்மை கொண்டது. கடுமையான கர்ம நோய்களை இதன் மூலம் குணப்படுத்தலாம். தர்ம சிந்தைனுடன் இறை அருளும் கூடப் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும். 

62.கோடக்சாலை 
விஷ சுரம், விஷக்கடியினால் ஏற்படும் உபாதைகளுக்குத் துணை மருந்தாக பயன்படுகிறது. 

63.பூவரசன் 
பழம் புண், ஊறல், தடிப்பு நீக்கிடும். 

64.ஆடாதொடா 
மூச்சுகுழல் அழற்சி, ஜன்னி உடல் வலிகளுக்கு ஏற்றது. 

65.ஜலதிரண்டி 
நீரையே கட்டக்கூடிய தன்மை கொண்டது.கட்டுக்கொடி என்று இன்னொரு பெயரும் இதற்க்குண்டு. 

66.மலைச்சுண்டை 
உள்அவயங்களில் இயங்கும் வால்வுகளை பலப்படுத்தும். உள்ரணங்களை ஆற்றும். 

67.கவிழ்தும்பை 
தும்பையின் நற்குணங்கலையே உடையது. அறிய பச்சிலை. 

68.சிறு கண்ணுப்பீளை 
சிறுநீர் தாரையில் எரிச்சல், நீர் சுருக்கு நீங்கிடும். 

69.ஒதியம் எனும் வெண்மருது 
உடல்தசைகளில் நார்களில் ஏற்படும் வலுவின்மையை சீர்செய்து உடல் உரமேற்றிடும். 

70.இத்தி 
பீடை நோய்கள், குடல் வாத நோய்கள், சூலை, கொடிய மேக நோய்கள் குணமடையும். 

71.சந்தனம் 
நல்ல உடல் வலுவும், வனப்பும் உண்டாகும். நற்குணங்களும், திருமகளின் திருவருளும் கிடைக்கும். உஷ்ணாதிக்கம் குணமாகும். 

72.தலைச் சுருளி 
உடலில் தோன்றும் படர் குஷ்டம் எனும் பெரு நோயையும், இருதய வீக்கத்தையும் போக்க வல்லது. 

73.மிளகரணை 
ஈளை இருமல், இலைப்பிருமல் அஜீரணம் ஐய நோய்களை நீக்கிடும். 

74.செவ்வியம் 
நுரையீரல் நோய்களை அகற்றும். சுவாச காசம் நீங்கிடும் 

75.காட்டத்தி 
இரத்த கடுப்பு, சீதக்கடுப்பு மற்றும் கெட்டுப் போன உள் உறுப்புகளின் திசுக்களை சீராக்கிடும். 

76.ஆல் 
இதன் விழுதும் மற்றும் பட்டையை கொண்டு உடலை வலுவேற்றவும், உள் விகரங்களை போக்க வல்லது 

77.மலை வேம்பு 
கடுமையான மேக நோய்கள்,கரும் கரப்பான் கட்டிகளை குணப்படுத்தும். கருப்பையை சீர்படுத்தும். 

78.கருநீலி எனும் வண்ணான்சாலி 
கற்ப மூலிகை. உடல் பொன் போலாகும். இரத்த விகாரங்களை சமன் செய்து, சப்த தாதுக்களையும் வலுவேற்றும். 

79.புங்கன் 
வாதகடுப்பு, மகா மூர்ச்சை, வாத குன்மம் மற்றும் புரை ஒடிய புண்கள் தீரும். 

80.முட்சுங்கன் 
வாதம் மற்றும் வீக்கங்களை போக்க வல்லது. இதன் பழங்களை 

81.இண்டு எனும் இம்புறா 
ஐயம், பித்தம், இருமல், எரிச்சுரம், வயிற்றுப் பொறுமல் மற்றும் உப்புசம் நீங்கிடும். 

82.தவசு முருங்கை 
பீனிசம், உள்நாக்கு, கபம், ஐயம் போன்ற நோய்களை நீக்கிடும் 

83.விழுதி 
வெண்மேகம், சர்ம நோய், பிணைவ கட்டி மற்றும் சிரங்கு முதலியவை குணமாகிவிடும் 

84.கருந்தும்பை 
காணங்களில் சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்ற அரிய வகை மூலிகையினால் மூச்சு பாதை பராமரிப்பு, மூர்சையால் விழிப்பற்ற நிலையில் இதன் சாற்றை மூக்கில் விட மூர்ச்சை தெளியும். 

85.கல் அத்தி 
இரத்த விருத்திக்கும், கர்ம நோய்களை களையவும் உடல் உறமேற்றவும் பயன்படுகிறது. 

86.ஆத்தி 
இதன் பலகையில் ஆசன இருக்கை செய்து கொண்டு தியானிக்கையில் பிரபஞ்ச ஆற்றலை தன் வசம் ஈர்க்கும் தன்மை கொண்டது. இதிலேயே முனிவர்கள், ரிஷிகள் பாத இரக்சை செய்து கொண்டனர். ஆகர்ஷன சக்தி வாய்ந்த மூலிகையாகும். 

87.பூலாத்தி எனும் பூவில்லா அத்தி 
மாதரிடும் மருந்துகள், மேகம், காணக்கடி, கணைக் காய்ச்சல் நீங்கிவிடும். 

88.சிறுகுறிஞ்சான் 
உடலில் உள்ள சர்க்கரை சத்தை நீக்கிடும். இதன் இலையை சுவைத்தபின் இனிப்பு சாப்பிடால் இனிப்பு சுவை தெரியாது. 

89.பலா 
இதன் பாலுள்ள குச்சிகள் யாக சுல்லிகளுக்கே பெரிதும் பயன்படுகிறது. உணவு பதார்த்தமாகவும் உண்ணலாம். 

90.வேம்பு 
வீக்கம், கட்டிகளை குறைக்கும்.இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கும். 

91.அருகம்புல் 
இதன்ப் பயன் அபாரமானது. இரத்தத்தில் உள்ள நச்சினை நீக்கும். பழத்தையே நீர்த்துப் போகச் செய்யும் சக்தியையுடையது. உலகில் தோன்றிய முதல் தாவரமாகையால் இது மூதண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 

92.சிவனார் வேம்பு 
வாத விகாரத்தை தணிக்கும். குஷ்டம், பித்தம், பித்த வாய்வு மட்டும் கைகால்களை அழுக செய்யும் கஜகுஷ்டம் நீங்கும். இதை முறையுடன் உட்கொண்டால் உடலில் இருக்கும் நாற்றம் நீங்கி நரை, திரை அற்று உடல் வச்சிரம் போல் ஆகும் என்று அகத்திய பெருமான் தனது நூலான அமுத கலைஞானத்தில் கூறியுள்ளார். 

93.தான்றிக்காய் 
பல் ஈறுகளில் காணும் வைத்தியங்கள் நீங்கும். குடல் புண், மலக்கிருமிகள் நீங்கி குடல் சுத்தமாகும். 

94.ஐவிலை குருந்து 
இரும்பு, செம்பு, தங்கம் முதலிய உலோகங்களை கரைத்து ரசம் ஆக்கும். இது பெரும்பாலும் சித்தர் முறைப்படி வைப்பு வைத்தியம் மற்றும் ரச வாதம் செய்யவே பயன்பட்டது. 

95.வெட்பாலை 
இதனிலிருந்து எடுக்கும் எண்ணெய் சொரியாசிஸ் எனும் கரும்படை, காளான்படை நோய் நீக்கிடும். 

96.தைவேளை 
இது காதிரைச்சல் வலி, பீடை நோய்கள் பித்த ஆதிக்கம் நீக்கிடும். 

97.நாரத்தை 
தாகவேட்கை, வாய்வு தொல்லைகள் செரிமான கோளாறுகள் நீங்கும். 

98.மகிழம் 
இதன் பூ காய்ந்தாலும் மணம் குன்றாது. வெப்பு நோய்கள் நீங்கி,தாது புஷ்டியுண்டாக்கும். தேக அழகும்,பலமும் உண்டாகும். 

99.இலுப்பை 
அந்தர வாய்வையும், விஷ பாதிப்புகளையும் நீக்கிடும். 

100.ஊசித்தகரை 
வண்டுக்கடி விஷம், துர்நீரால் உருவாகும் சிரங்கு, நீண்ட கால நமைச்சல் புடைப்பு நீங்கும். 

101.தேவதாரு 
மனம் சாந்தமடையும். உள்ளக்கிளர்ச்சி தணியும். புத்தி பேதலிப்பினால் ஏற்படும் உளறல்கள் நீங்கும். 

102.அகில் 
சரும பரமரிப்புகளும், சதை மற்றும் தோலின் தளர்ச்சியை நீக்கி புதுப் பொலிவு தரும். 

103.செண்பகம் 
தீராத உஷ்ணம், கடும் காய்ச்சல், கண் பார்வைத் தோஷங்கள் குணமாகும். 

104.கிருஷ்ண பச்சை 
குழந்தைகளுக்கு காணும் சீர் தோஷம் குணமாகும். 

105.விஷ்ணு கிரந்தி 
சுரம் தணிக்கும், குடிநீராகவும் பயன்படுகிறது. 

106.விராலி 
சாறில்லா மூலிகை.கபம், ஆஸ்துமாவை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. 

107.அழிஞ்சில் 
இதன் விதையிலிருந்து வாய்வு மற்றும் பிடிப்புகளுக்கு நிவாரணியாகிறது. 

108.பேய்புடல் 
விஷச்சுரம், விஷஜந்துகளின் கடியின் விஷம் தணிக்கும். 

109.திரிசங்கு 
விசுவாமித்திரரின் இழந்த சக்திகளையும் மீட்டெடுக்க உதவிய உன்னத மூலிகை. மகா ஆகர்ஷன சக்தி வாய்ந்தது. 

110.கருநெல்லி 
கிடைத்ததற்கரிய மூலிகை 12 வருஷங்களுக்கு ஒரு முறையே சில காய்கள் காய்க்கும். 

111.மூங்கில் பிரண்டை 
உடைந்த எலும்புகளை ஓட்ட வைக்கும் மகா சக்தி வாய்ந்தது.