Friday 17 November 2017

THE REAL BLISS IS IN CALLING OUT TO YOU

நாராயணா ஹரி நாராயணா

நொந்துடலும் கிழமாகிக் தளர்ந்தபின்
நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று சிந்தை கசிந்துன்னை கூவுகின்றேன்
அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா

நீடு கபம் கோழை ஈழை நெருக்கி
என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறியபோது
மனம் எண்ணிடுமோ தெரியாது
நான் அன்றுன்னைக்கூவிட
இன்றழைத்தேன் என்னை
ஆண்டருள்வாய்  ஹரி நாராயணா

ஐம் பொரியும் கரணங்களும்
வாயுவும் ஆடி அடங்கியபோது
எந்தன் ஆவி பிரிந்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று நம்பி உன்னை தொழுதே
அழைத்தேன் ஜகன் நாயகனே
ஹரி நாராயணா

எம்பொருள் என்மனை
என்றேதெல்லாம் இனி இல்லை
என்றாகிடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
நீ அன்று வரும் பொருட்டின்றழைத்தேன்
அருள் அச்சுதனே ஹரி நாராயணா

வந்து எம தூதர்கள் வளைத்து
பிடித்தென்னை வாவென்று
இழுத்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
அந்த அந்தியம் நீ வர
இன்றழைத்தேன்
சச்சிதானந்தனே ஹரி நாராயணா

உற்றவர் பெற்றவர் மற்றவர்
சுற்றமும் ஓவென்று நின்றழும்போது
உயிர் ஒசைகள் ஓய்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று பற்றி உன்னைப் பணிந்தே
அழைத்தேன் ஆபத் பாந்தவனே
ஹரி நாராயணா

- அகத்தியர்




அங்கும் இங்கும் எங்குமாய்
அமைந்த தேவ தேவனே
ஆதியாய் அநாதியாய்ச்
சமைந்த ஜோதி ரூபனே
மங்கலங்கள் யாவும் நல்கும்
அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூசையில்
மகிழ்ந்தருள் நடேசனே

எந்த இல்லம் ஆயினும்
இருந்த இல்லம் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம்
தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ் சொல் மந்திரம்
திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்த பாத பங்கயம்
உவந்தருள் நடேசனே

மண்ணிலே எடுத்தகால்
என்மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்த நன்மை
விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அணுகிடாமல்
ஈசனே தடுத்துணை
ஏத்தும் அன்பர் குழுவில் என்னை
செர்த்துவை நடேசனே

ஆ பயந்த ஐந்தினோடு
பால் பழம் பஞ்சாமிர்தம்
அலைவாய்க் கரும்பு தெங்கு
தேன் சுகந்த சந்தனம்
நீ பயந்த யாவையும் நினக்களித்தேன் ஆடி
நேர்ததியாய் அனைத்து ஆடி
வாழ்த்துவாய் நடேசனே

வில்லினால் அடிக்கவோ
வீசுகல் பொறுக்கவோ
மிதித்த பாதுகை பிரம்பை
மேலும் நான் எடுக்கவோ
நல்ல பிள்ளை என்னை
ஆளும் நாதனும் நீ அல்லவோ
நாளும் நான் படைத்த
சொல்லும் பூவும் கொள் நடேசனே

ஆட நீ எடுத்தாய்
அறிந்தவர் இயம்புவார்
அல்ல அல்ல என் தலைமேல்
சூட என்று சொல்கிறேன்
ஈடில்லாத தெய்வம் நீ
இடப்புறம் எடுத்த கால்
எந்த நோக்கில் என்று
சொல்ல வந்தருள் நடேசனே

மழுவெடுத்த எதை விளக்க
மன்று தோறும் ஓடினாய்
மதியெடுத்து சிரம் இருக்க
மந்தனாய் ஏன் ஆடினாய்
கழுதெடுத்த நடனம்  ஆடும்
காட்டில் என்ன தேடினாய்
கையில் நான் எடுத்த தூபம்
கொளுவாய் நடேசனே

எடுத்த தூபம் ஆதியாவும்
ஏற்றருள் மகேசனே
இன்று நான் படைத்த யாவும்
உண்ணுவாய் சபேசனே
தடுத்த பண்டை வினையகற்றித்
தாங்குவாய் சர்வேசனே
சரணம் உன்னை அன்றி ஏது
தாங்குவாய் நடேசனே

வாழி நீ படைக்கும் தெய்வம்
மலர் அணை அமர்ந்த தாம்
வகுத்தளிக்கும் தெய்வம் கூட
அரவணை கிடந்ததாம்
ஊழி தோறும் ஐந்தொழில்
உவந்து செய்யும் ஈசனே
ஓய்ந்து சற்றென் நெஞ்சனைக்கண்
சாய்ந்து கொள் நடேசனே

ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ரூபனே
ஓதும் ஐந்து சபையில் ஆடும்
பாதனே சங்கீதனே
வாமியாய்த் தழைத்த சிவ
காமி காதல் நேசனே
மாறிலாத கருணை நீ
வழங்குவாய் நடேசனே