Wednesday 8 March 2023

FURTHER REMINISCENCE

After Agathiyar acknowledged that we are already there it justifies looking back on the events that brought us to where we stand today. We continue further. The reason I am sharing these notes now is to induce others to come to the path as there are those who want to know what benefits they can gain from something before venturing into it, though that should not be the reason to come into the Siddha path. It should be out of love for them and their teachings. But nevertheless, this might entice them to come to the path of the Siddhas and I would be deemed to have carried out Tavayogi's dream and wishes in wanting to see more homes turn into Agathiyar Vanam.

9.9.2006
பக்குவங்கள் பெறுவதற்கே தவயோகி தன்னை
தான் அவனை அறிமுகம் செய்து வைத்தேன்.
தவறாது அவன் ஆசி தீட்சை பெற்று
புண்ணிய பலன் மிகுந்து உள்ளாய்.
உள்ளத்தில் உயிர் மூச்சில் நான் இருக்க
எங்களைப் போல் வாழ்வு உனக்கு உண்டு.
நன்றான சுப்ரமணியன் அருளும் ஆசி 
மென்மையாய் அக்னி தளத்தில் பெற்றாய் மகிழ்ச்சி.
மேன்மை நிலை அடைந்த்தாயே அவனே சாட்சி.
அவன்தானே உன் அறிவை திறந்து வைத்தான்.
அவனுக்கே நன்றி சொல் வாரம் ஒரு நாள்.
தவ வாழ்வு வாழ்ந்திடுவாய் இக்காலம் தன்னில்.
தான் அதற்குச் சுப்ரமணியன் காரணம் என்போம்.
கலியுகத்தில் உண்மை அறிந்து ஞானம் பெற
குருவாம் தங்கராசனை அறிமுகம் செய்தோம்.
குருவாக ஏற்க சொன்னோம் காரணம் கேளு. 
கேளப்பா உலக உண்மை சூக்கும ரகசியம் நீ கண்டு நிலைத்து வாழ விளம்பினோம் குருவாய் ஏற்று தீட்சை பெற சொன்னோம். வையகத்தில் அவன்மூலம் ரகசிய உண்மை பல
உயிர் ஆக்கை பற்றி விளக்கம் உத்தமமாய் படி படியே கிட்டும் உனக்கு.
பண்புடன் முழுமதி நாள்தோறும் மாறாப் 
பண்பாக இல்லத்தில் சித்தர் பூசை சித்தர்களை அழைத்துத் தான் வேண்டுதல்கள் சிறப்புடன் செய்த்திடுவாய் மகிழ்ச்சி அப்பா.
சுத்தமான உன் பூஜை சித்தர்கள் கண்டு சரியாக இல்லத்தில் குடி கொண்டோம் தானே.
எங்கள் சக்தியும் பார்வையும் தான் 
தன்னை சூழ்ந்து மனைவி மக்கள் சூழ்ந்து உள்ளது. 
உன்னைச் சூழ்ந்தும் இல்லம் சூழ்ந்தும் எங்கள் வாசனை இருப்பதனால் வெற்றிகளை ஞானம் வழி உலகில் கண்டு வையகத்தில் நிலைப்பதற்கே செனித்தாய் அப்பா.
வாழ்க்கையிலே என் வாசம் மிகுந்திருக்க 
வளர்ந்திடுமே அறிவின் மேன்மை ஞானமும் உனக்கு.
அழியாத என் மார்க்கம் பற்றி இருக்க 
அதிசயமே கண்டிடுவாய் நாளும் நாளும்.
நாள் நாளும் உன் பூசை வணக்கம் கண்டு 
ஞானி, சித்தர், மகன்களும் பூரித்து போவார்.
அன்றாடம் தியான பயிற்சி ஆகையின் பொருட்டும் செய்திடுவாய் மைந்தா.
எண்ணம்போல் பயற்சி எல்லாம் சித்தி கண்டு
எங்களைப் போல் உண்மை அறிய வழிகள் தருவேன்.
கடுமையான தவங்கள் பூஜை செய்தாய்.
பூசையில் கர்மத்தை போக்கியவான் நீ தான்.