Monday 13 March 2023

MORE READINGS....

15.2.2013

உன்னோடு நான் இருக்க உனக்கு ஏன் வாக்கு. ஓதாது உணரும் சக்தி பெற்று விட்டாய். உச்சி திறந்த உத்தமன் நீ அறிவாய் இன்றோ. சுழி திறந்து முனை திறந்து முக்தி கண்டாய். 

உன்பேரில் என் கோட்டம் தடமும் தன்னில் தவறாது பூஜை இது நடப்பதைக் கண்டோம்  தான். ஓதி தான் இல்லம் தன்னில் பரமசிவன் மனங்குளிர்ந்தான் உன் பூஜை கண்டு. 

காலத்தில் கருத்துடன் பூஜை முறைகள் கீர்த்தி நிலை தந்திடும் தான் யாவருக்கும். 

தேடிய நாடிய காலமெல்லாம் போதும் தேடி வந்து அருள் செய்வோம் இனித்தான் உனக்கு. 

ஞானிகள் பலரும் அகத்தியனினுள் வந்து நலமோடு செய்திடும் பூஜை தன்னை நாள் நாளும் கண்டுதான் கழிக்கின்றோம் திண்ணம். 

திகைக்கும்படி மகிழும் படி சேவை தொண்டு. வியப்படைந்து மகிழ்ச்சி கண்ட தேசம் இது தான். தேசத்தில் தன் இல்லம் தன்னில் தான்  நீ அறிவாய். 

தீர்க்கமாய் பொருள் சொல்லி வழிபாடுகள் மாந்தர் சிலர் வந்தாலே மனம் குளிர்ந்து போவார்.

நலமான உன் இல்லாள் தனக்கு நாமே சொன்னோம். ஆக்கைக்குள் எங்கள் ஆசி இருவருக்கும் அருளுடனே இருக்கிறது அப்பா திண்ணம் தானே. அழகு பார்ப்பாய் ஓய்வு இல்லா சோம்பல் கொள்ளா. அழகு பார்ப்பாள் உன் இல்லாள் அதுபோல். ஓங்கி நிற்கும் அவளுக்கு ஆசி இப்போது. உலகு தன்னில் என் இல்லாள் பெற்ற ஞானம் உத்தமமாய் உன் இல்லாள் பெற்றிடுவாள் திண்ணம். பேர் ஆனந்தம் நீ அடைய இது உலகில் பெரும் பாக்கியம் பெற்றவளே உந்தன் இல்லாள். பூர்வ வழி  பந்தத்தால் அமைந்த வாழ்வு. 

அழியாத மார்க்கத்தில் சார்ந்து நீயும் அற்புதமாகச் சேவைகளும் செய்வாய் அப்பா.  

உற்றதொரு உயர் சக்தி ஞானம் சூக்குமம் மேல் காண தக்கதொரு குருநாளும் சதயமின் மாற மண்டலம் அரை மட்டும் உத்தமமாய் ........

ஓங்காரம் உன்னுள் ஓங்கி நிற்கும். ஒப்பிலா அற்புதங்கள் அதிசயங்கள் உத்தமனே நீ கண்டு கழிப்பதைக் காட்சியோடு தேடி வரும் பண்டம் பொருள் ரகசியமாக. 

அடையாத யோகம் எல்லாம் அடைந்து விட்டாய். அடயோகம் தன்னில் கிட்டும் சூக்குமம் கூட. அழியாத மார்க்கத்தைச் சார்ந்திருக்க அழிவில்லா யோகங்களும் இல்லவளுக்கு அகத்தியனின் ஆசியும் அளித்தேன் இப்போது. கீர்த்தி நிலை மக்களுக்கும் இருக்கிறது.  

24.11.2013

நெரித்தவரா மார்க்கத்தை முறையே பற்றி நிறைவாகத் தொண்டு பூஜை செய்யும் பிள்ளை. அழியாத மார்க்கம் என்று சொன்னோம் நாங்கள். அனுமாரா இருந்து நீ அற்புதம் அதிசயம் காண்பாய். அகிலத்தில் யான் வாழும் தடம் வந்து நோக்கிச் செல்வார். ஒரு உண்மை உந்தனுக்குச் சொல்லி நிற்பேன். முழுமதியும் கடந்திட்ட பூஜை தன்னில் முழி திறந்து விழி திறந்து காட்சி தந்தேன். விழி திறக்கும் ஞான கோட்டம் உந்தன் இல்லம். 









உன் இல்லம் தனிலே முழுமையாய் ஓய்வு எடுக்கும் தடம் சாலை அதுவும் தானே. பழுதில்லா தொண்டு பூஜை தனையும் செய்வாய் பக்குவமாய் ஏற்றுத் தான் மகிழ்வேன் நானும். நாங்கள் எல்லாம் சூழ்ந்து தான் வந்து ஆசி நல்குவோம். நான்கு நாமம் வைத்துக் கொண்டு தான் தொண்டு சேவை நலமோடு செய்வாய் மகிழ்ச்சி மகிழ்ச்சி. 

உன்னை அழைத்து வாக்கு சொல்ல மனம் துடித்தேன் இன்று தான்  காலம் தன்னில். தாய்வீட்டான் ஆசி அதுவும் இருப்பதனாலும் தானவன் மூலமாகச் சக்தி பல கிட்டும். அவனுள்ளே இருப்பதுவும் என் அருளே. அவன் வேறு நான் வேறு இல்லை அப்பா. அகிலமதில் முறை குரு அவனும் உனக்கு. 

வழிபாடு முறையாய் செய்து உலகுதன்னில் கரை தேற்றிக் கொள்வாய் நீயும். முறையான இன்பங்கள் மக்களுக்கும் மனைவிக்கும். அடையாத யோகங்கள் உனக்கு இல்லை. அடைந்து விட்டாய் அருள் தவ பூஜையாலே. 

குவலயத்தில் ஓதாவிட்டாலும் ஓதிடுவேன் பல வகையில் உன்னிடத்தில். கலந்து உந்தன் ஆக்கையில் இருப்பேன் யானும். 

ஒப்பிலா இன்பங்கள் மனைவி மக்களுக்கும். தக்கதொரு அதிசயங்கள் அற்புதங்கள் தனக்கு இந்த இந்தியா பயணம் தன்னில் கண்டு கழித்தாய். அபார பண்டங்கள் அனுக்கிரகம் புரிந்து உள்ளோம். 

அகிலத்தில் அற்புதங்கள் அதிசயங்கள் அடுத்தடுத்து உண்டு அப்பா.