Sunday 12 March 2023

MORE NADI RECOLLECTIONS

Putting out the message that was conveyed from Lord Muruga of Tavayogi's dream to see each home turn into Agathiyar Vanam, a devotee couple from South Africa messaged me the good news.

This is so beautiful aiya...to fulfill swami's wish. Some time ago in a reading, our father said that our home was Agathiyar Arul Vanam so I named it as such. It's his home.

Many have said that they shall take up the puja and see Tavayogi's dream come true. This is the least a disciple could do for his or her guru. Anyway, the benefits gained in worship are more towards the enrichment of our soul besides providing cover to storm the bad weather and ammunition to battle the influx of bad vibes. So it is very apt that Tavayogi wants us to bring the worship of the Siddhas into our homes. Going by the many Nadi readings that I have posted from 2002 to 2010 the onus was on us to carry out worship, charity, and yoga. The rest lies with the Siddhas. Let me share my Nadi reading further for those keen to travel the path with us.

27.8.2009

கூசாது எங்கள் புகழ் பரப்புவாயே. குவலயத்தில் பெரும் புண்ணியம் அளித்தோம் அதனால். அளித்துவிட்டோம் உயர் வித ஞான சூட்சுமம் எல்லாம். கள்ளமில்லா நாடிவரும் பாக்கியம் உனக்குக் கருத்துடனே. பேற்று கொள்வாய் அணைத்து யோகம் யாவும். ஏகமான சிந்தனையும் முழுமை கொண்டு இருப்பாயே ஞானம் மார்க்கம் தன்னில் நன்றாய். நன்றான ஞானம் எல்லாம் பெற்ற பிள்ளை ஞானிகளின் உறவு கொண்ட சித்தர் பிள்ளை. வினவாத  ரகசியம் கொண்டவன் நீயும் வெற்றி நிலை மிகுந்து காணத் தவ சூட்சுமம் தான் விவரிப்பேன் இரு மண்டலம் செய்வாய் நன்றாய். நெறியுடன் தினம் .....

பலப்படுமே ஞான நிலை பலவாறாக. பிரபஞ்சம் வசிய நிலை திண்ணம் திண்ணம். உலகினிலே நாங்கள் செய்த பயிற்சி தான் உவந்து சொன்னோம் உனக்குமே சூட்சுமம் முற்றே.

26.12.2009

அஞ்ஞானம் விலகிய சித்தன் பிள்ளை பொற்பதமாய் ஞானத்தைப் பெற்று விட்டாய். நான் உந்தன் இல்லம் தேடி அமர்ந்தேன் அப்பா. பிரகாசமாய் உன்னில் வந்து அமர்ந்தேன். பார்க்க என் ஜெயந்தியே உன் ஜெயந்தி தானே. ஞானத்தின் திறவுகோல் திறந்த பிள்ளை நல்விதமாய் உச்சியும் திறந்த பிள்ளை முக்கண்ணும் பிரகாசிக்கும் உந்தனுக்கு. 

உலக மாந்தர் நலம் பெறவே பூஜையும் செய்வாய். தான் அந்த நாளிலே தன் குடிதன்னில் தவறாது நவ கோடி சித்தர் எல்லாம் வந்து அருள் பொழிவோம் நாங்கள். அமர்ந்திட்ட இடம் ஆனந்தம் தானே. அது உண்மை நீ அறிந்து கொள்வாய் இப்போது. அன்று நாளில் நான் எழுந்து உந்தன் இல்லில் அருள் பலதும் வழங்குவேன் யாவருக்கும். தான் நீயும் பெற்றிட்ட ஞானத்தை விடத் தான் அன்றே பெற்றிடுவாய் தவயோகி பலதை.

2.1.2010

ஆனதொரு உலக மக்கள் நலமே காண அகத்தியன் யான் உன் இல்லம் தேடி வந்தேன். என் நாமம் சொல்வோருக்குக் கருணை உண்டு. வாழ்வாங்கு வையக மாந்தர் காண வந்து அமர்ந்தேன் என் பிள்ளை இல்லம் தன்னில். ஆனதொரு அகம் மகிழ என் நாமம் சொல்வோர் குடியில் வந்து அமர்ந்து அருளும் செய்வேன். நாமத்தை நாள் நாளும் சொல்லி வந்தால் நான் அடைந்த புண்ணியங்கள் கிட்டி விடும். சேமமான என்னைப் போல் அருளும் கிட்டி சகல சௌபாக்கியங்கள் அடைவீர் தானே.

31.1.2010

உயர்ந்தவாறு பூஜையும் முறையே செய்தாய். சாட்சியாய் உரு தனக்கும் ஏறியது அப்பா.

3.4.2010

உயர்ந்த நிலை யாவும் இருக்குதப்பா. என்னை வைத்துப் பூஜையும் வழிபாடுகள் இஷ்டம்போல் அர்ச்சனையும் அபிஷேகங்கள் இணக்கமுடன் செய்திடுவாய். சித்தனுக்கு நிகரான அருளும் இப்போது
சுத்தமுடன் உனக்குத் தான் அளித்து விட்டோம். பொதிகை முனி உன் இல்லில் அமர்ந்தவாறு பூவுலக மாந்தரையும் பார்ப்பதோடு பொறுப்புடன் உன் குடியைக் காத்துக்கொள்வேன். நாடி பலர் வந்திடுவார் அது தடத்தில். நலமான ஞானிகளும் சித்தரும் தான். செப்ப இந்தக் காலத்தில் யோகம் பல காணச் சாதகனே என் யோகா பயிற்சி தன்னை சாற்ற நீ தினம் ........

அழியாத யோகம் மனைவி மாந்தர் பெறுவார். எனக்குச் சேவை செய்து வரும் மாந்தன் நீயும் என் பிள்ளை. தானிருந்த தடத்தினிலே இருந்த வண்ணம் தனக்குப் பல உபதேசம் உனக்கு உரைப்போம். சித்தனைப் போல் வாழ்வு இருக்கிறது.

12.7.2010

நிலை புவியில் ஞானம் பெற்று என் மகன் வாழ இயம்புவேன் அகத்தியன் யான் வாக்கு தன்னை. தரணியிலே சதாசிவனைக் கண்டவன் நீ. ஆனதொரு புண்ணியங்கள் பலதும் செய்து அகத்தியானின் புகழ் தன்னை பரப்புவாயே. வாயாலும் மற்ற பல புலன்களாலும் வண்ணமதாய் சேவைகளும் செய்வாய் அப்பா. தயவான சிந்தையுடன் பூஜைகளும் தான் செய்வாய் மகிழ்ந்துமே குளிர்ந்தேன் யானும். குளிர்ச்சியும் நாள் நாளும் என்ன வண்ணம் குவலயத்தில் விரும்பும் இடத்திற்குக் கொண்டு விளம்பரியும் போலத் தான் மந்திர பூஜை. வணக்கங்களும் புளகாங்கிதம் தந்தது அப்பா. ஒப்பிலா மாற்றங்கள் மகத்துவமும் உயர்நிலை பூஜையிலே இருக்குதப்பா. எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன் யானும். பெருமை பல தன் பூஜை தன்னால் தானே. பெரும் சக்தி தான் உந்தன் இல்லத்தில் கண்டேன். 
உண்மையும் உத்தமமும் நிறைந்த பூஜை. 
நிறைந்த இன்பம் தந்திடும் மகத்துவ பூஜை.
நிதானமானதொரு அற்புத பூஜை.
அறமுடனே அகிலம் காக்கும் பூஜை.
அருளான மாந்தரோடு செய்வாய் நன்றாய்.
நன்றான புண்ணியங்கள் காக்கும் பூஜை.
நற்கதியும் பலர் அடையச் செய்யும் பூஜை.
எண்ணாத சக்தியெல்லாம் தந்திடும் பூஜை.
ஏகாந்த நிலை அடைய வைக்கும் பூஜை.
வையகத்தில் மாந்தரின் அகத்தின் ஜோதி வளமாக்கும் முழுமதி பூஜை.
அப்பா ஐயத்தை நீக்கிடும் பூஜை தானே.
ஆண்டவனை அடையச் செய்யும் வழியும் இதுவே.
வழிவகுக்கும் சேய்க்கும் மாந்தர்க்குத் தான்.
வளத்திற்கும் அருளுக்கும் பொருளுக்கும்.
அழியாத மார்க்கத்தில் இருந்த வண்ணம் அகிலத்தில் நிலை பெற்று  வாழ்வளிக்கும் பூஜை.
பூஜையால் புண்ணியங்கள் கிட்டும் பூஜை. 
பூர்வமும் போக்கிடும் பூஜை அப்பா. 
இசையுடனே குடும்ப வளம் தந்திடும் பூஜை. 
எவையெல்லாம் வெண்டினும் தந்திடும் பூஜை.
தந்திடும் தர்மம் தவ சிந்தை தரித்திரம் போக்கும் பூஜையாகும்.
அண்டமும் ஆதியும் இல்லாத அகிலமதில் உயர்வு தரும் பூஜை அப்பா. அப்பனே ஆண்டவனே உருகும் பூஜை.
அறிவிழந்தோன் அறிவாளி ஆக்கும் பூஜை தானே.
ஒப்பிலா மகத்துவம் கொண்ட பூஜை.
உயர்வோடு நீ எடுத்துச் செய்வாய் அப்பா. 
அப்பனே நீ எந்தன் பிள்ளை தானே அதனாலே இது பொறுப்பு உனக்குத் தந்தேன். தப்பாது திசைமாறச் சயனம் மாறாத் தான் பூஜை செய்வாயே. நலமோடு தான் தான் உனக்குள் என் அருளும் நிறைந்திருக்க தவமகனாய் வாழ்ந்திடுவாய் என்ன வண்ணம். ஆனதொரு பலர் தேடி உன் இல்லம் வருவார் அகத்தியன் யான் அங்கே இருப்பதினால். உண்மையாய் பூஜையைத் தினமும் நாளும் உயர்ந்தவாறு செய்திடுவாய் என் அருளும் உண்டு முற்றே.