Friday 10 March 2023

LOOKING FOR THE SIGNS

The search for the signs continue.

29.1.2008

சித்தர்களுக்கு இல்லிலே பூசை நீயும் சுத்தமுடன் செய்ததையுமே உணர்ந்து கொண்டோம். ஏற்று நாங்கள் ஆசியும் அளித்தோம் அப்பா.  முக்கண்ணும் ஒளி திறக்கும் உனக்கு இனி தான். சித்திக்கும் அடுத்தடுத்து இன்னும் பல யோகம். கணக்காக நூல்கள் பல ஆய்வும் மேலும் நானிலத்தில் எங்கள் துணை ஆசியாலே.

8.3.2008

புவனத்தில் நீ பெற்ற புண்ணியங்கள் பூர்வ பந்தம் அப்பா. அழியாத மார்க்கம் வழி உனக்குத் தந்தேன் அருளோடு பெற்றுக் கொண்டாய் நீயும் மைந்தா. தயவான செயல் பாட்டில் தெரிகிறது அப்பா தவம் சித்தி ஞானம் சித்தி முக்தி சித்தி.

25.4.2008

மாசில்லா குருவையும் கண்டு வணங்கி மனமகிழ்ச்சி மனம் குளிர்ந்து உள்ளாய் இப்போது. உள்ளதொரு அற்புதங்கள் வருட முழுமதி நாளில் உனது இல்லில் சித்தர் எல்லாம் வாசம் செய்வோம். தர வேண்டும் பொக்கிஷங்கள் என நினைத்தோம். தவறாது யோகி வழி உனக்குக் கிட்டும். பெரு மாற்றம் இனி இனி காலம் எல்லாம். பேதமில்லா யோகத்தை அடைவாய் தானே. தான் நீயும் நடமாடும் சித்தன் அப்பா. தரணியிலே நாங்கள் அறிந்த உண்மை இதுதான். அருள் பெற்ற ஞானம் பெற்ற சித்தன் பிள்ளை. சுகம் அறுத்துச் சுகம் காணும் வள்ளல் பிள்ளை. வள்ளலைப் போல் சிந்தையும் கொண்டு உள்ளாய். அப்பனே உன் நாமம் விளங்கி நிற்கும் எங்கள் மார்க்கம் தழுவியதால். பற்றிக் கொண்டோம் உன்னையும் கரம் தன்னை. சேமமுடன் பூஜையும் தொடர்ந்து செய்.

18.5.2008 by Pathanjali

வினை தன்னை தவத்தாலே யோகத்தாலே அறுத்து வளம் பெறவே தவம் உன்னைப் பாதுகாக்கும். சித்தர் புகழ் பரப்புவாயே. யோகத்தில் தெரிகிறது தான். ஆண் உனக்கு உச்சி நெற்றி திறக்கும் தானே. ஒப்பிலா உடல் சூடும் தியானத்தால் உனக்கு. சோர்வு வந்திடுமே இக்கணமும் தன்னில். தான் நீயும் குளிர்ச்சி தரும் உணவுப் பண்டம் தவறாது ஏற்றிட வேண்டும் அப்பா. கணக்காகச் சித்த மார்க்கம் முழுமை பற்றிக் கடுகளவும் மாறிடாது பூஜை நெறிகள் நெறி தன்னை ஒழுகிடுவாய் கண்டேன் நானும். நிலைத்துத்தான் அங்கத் திடம் ஓங்கச் சிறப்பாக வாரம் ஒரு நாள் மட்டும் ......

உப்பு புளி காரம் இனிப்பு கண்டிப்பாக ஆகாது ஏற்க வேண்டாம். ஆக்கை திடம் பயிற்சி வருமே. காணத்தான் ஆழ்நிலை தியானம் சித்தி. சித்திக்கும் பயிற்சிகளும் யோகம் ஞானம். பதஞ்சலியின் யோக சூசம் இது தான் மைந்தா. மைந்தனே அடுத்தடுத்து ஞானசுச்சம் மகத்துவமாய் எடுத்து உரைப்பேன் உனக்கு மைந்தா. வண்ணமதாய் பயிற்சிகளும் முறையே செய்ய வளமிருக்கு வர்ணமும் ஆதாரம் சித்தி. கொண்டதோர் குண்டலினி ஓங்கும் பரு.

குவலயமே விளங்கிடும் உன் பூஜையாலும். பூஜையும் சேவையாலும் சித்த மார்க்கம் பரவிப் பூவுலகில் நல் சேவை செய்வாய் அப்பா.

12.7.2008

மாசிலா எங்கள் மார்க்கம் சார்ந்திருக்க மகத்துவமே உனக்குமே மிஞ்சி நிற்கும். வணக்கம் அதைக் கைவிட வேண்டாம் அப்பா. மேலான யோகங்கள் பெற யோகம் இருக்கிறது. மகிழத் தான் உன் குடியும் உயர்ந்து ஓங்கும்.

19.8.2008

சத்குருக்கள் ஆசி பல உனக்கு இருக்கச் சத்குருவாய் நீ திகழ ஆசி தந்தோம். ஜெகத்திலே பெரும் ஞானம் பெற்றுச் சித்தி பெற்று நீ வாழ ஆசி உண்டாம். அஞ்ஞானம் விலகியும் ஞானம் பெற்று அகிலத்தில் பெரும் யோகம் பெறுவாய் மைந்தா.

30.9.2008

நெறி தவறா சித்தர் மார்க்கம் பற்றினாயே. நேர்மையான தவத்தால் நெற்றிக் கண் ஒளியும் ஒளி அதுவும் உனக்குமே வெளிப்பட்டது இப்போது. உயர் நிலை இனித்தான் உந்தன் வாழ்வில். அளவிலா சக்தி கொண்ட ஞானியரை வணங்கி அஞ்ஞானம் விளங்கியவன் நீயும் ஒருவன். பார் உலகில் மனம் சிதறியோர் பல கோடி கோடி. பக்குவங்கள் பெற்றவர்கள் சிலரும் தானே. தான் அதிலே நீயும் ஒருவன். மகிழ்ந்துகொள். தவம் அதுவும் முறையாகச் செய்வாய் இப்போது. தான் அதில் பிழை ஏது குறையும் ஏது. திண்ணமாய் முக்கால தன்மை தெரியும். தெய்வீக சக்தி எல்லாம் மிகுதியாகும். கண்ணியமாக வாசி தன்னை வசப்படுத்திக் கணக்காகப் பூஜிக்கச் சிறப்பு தானே. சித்தர் எல்லாம் வாசி வழி தேர்ச்சி கண்டார். சிறப்பு மிக்க மூத்தோனும் புத்தனும் தான் சிறப்பான வாசிக்கே அதிபதி ஆவார். ஆனதொரு வாசி தன்னை அடக்கினாலே ஆயுளோடு மரணமில்லா பெருவாழ்வு உண்டு. தவசி எல்லாம் வாசியாலே தவமும் பெற்றார். தான் அடைந்த உண்மையெல்லாம் உனக்கு உரைத்தோம். உரைக்கப் பல காத்து உள்ளோம் சூக்குமம் தானே. கணக்கு அறிந்து வாழ்வாயே கெளசிகன் பிள்ளை. கௌதம புத்தனாக விளங்க ஆசி.

8.12.2008

நெறிதவறச் சன்மார்க்கம் தன்னை பற்றி நிதானமாய் தவம் செய்வாய் கண்டு களித்தேன். உள் ஒளியாய் காணுகின்ற சக்தி எல்லாம் உத்தமனே பெற்றவன் நீ நாங்கள் சொல்வோம். சொல்லத்தான் உன் வாசி பயிற்சியாலே சுழி திறந்து உட்சியும் திறக்கக் கண்டாய். வழிமாரா தவம் தன்னை செய்வாய் அப்பா வசமாகும் அதனாலே சூக்குமம் எல்லாம் அடுத்தடுத்து பிரகாச நிலையும் அடைவாய். அடைந்த இந்தப் புண்ணியத்தால் ஆனந்த நீரும் அன்றாடம் நீ விடுவாய் கலித்துத் தான். அழகு பார்ப்பாய் எங்களையும் நாள் நாளும் நீ தான். அதனாலே ஏழுதிரையும் தன்னை நீக்கி வழுவாது ஜோதி தன்னை காண வைப்போம். வையகத்தில் பூர்த்தி நிலை அடையச் செய்வோம். அடைய வேண்டும் பக்குவங்கள் இன்னும் பலவார். அதனாலே எங்களோடு தொடர்ந்து இருப்பாய். ஆட்சியாய் பக்குவத்தை முழுமை தந்து அறியா நிலை தன்னை நீக்கி மெய் நிலை தந்து உனக்குத் தேடிய காலம் போய் மாறி உன்னை மாந்தர் தேடி வரவே செய்வோம். சேராத நிலையெல்லாம் சேர்த்து வைத்துச் சொரூப நிலை யாவும் பெற வழியும் செய்வேன். பிரகாசமாய் நான் அமர்ந்து குடில் வரும் மாந்தரைப் பிரகாசிக்கச் செய்வேன் என் தலைமையில் அப்பா.