Monday 13 March 2023

MORE READINGS ...

Today after having led us on worship, charity, and yoga, Agathiyar, and Tavayogi have tasked us to give back to society and share what we had learned. They want each home to become an Agathiyar Vanam. To understand what needs to be done we have to revisit what took place in the early days of my worship to the Siddhas at home and how the home of a family man became Agathiyar Vanam. This would give others an idea of where to start. Hence the only reason I am sharing the Nadi readings that were a source of nourishment, guidance, and endorsement from the Siddhas to say that I was on the right track.

9.8.2010

கள்ளமில்லா மனம் சிந்தை கொண்டுதானே கருத்துடனே பூஜைகளும் செய்வாய் நன்றாய்.
நன்றானே மாற்றங்கள் சார்ந்து செய்வோர் நார்கதியும் பெருவாரே சித்தன் சொல்வேன்.
உண்டான ஞான கனல் மிகுந்த காலம் உயர்வான காலம் அப்பா இது இந்தக் காலம்.
குருமுனி என் தன்னை இடம் பல மாற்றி மாற்றியதோர் கூட்டு நல் பிராத்தனைகள் மனம் குளிர செய்வாயே வெற்றி உண்டு.
பற்று அற்று பூஜைகளும் தொண்டும் பலவாறு பார் உலகில் செய்வாயே மகிழ்ச்சி உண்டு.
இகபரத்தில் உன் இல்லில் இருக்கும் நான் திறந்த விழி பார்ப்பேனே சிலரை மட்டும். சிந்தனையில் கொண்டு தான் கூர்ந்தோருக்கு சிறப்பான தரிசனங்கள் காட்சி உண்டு. காட்சி பல மாற்றங்கள் உருவம் தன்னில் கணக்காக உண்டு அப்பா உயிர் உள்ளதனால்.
ஆட்சியாய் உன் இல்லம் தன்னில் அமர்ந்தேன் அமர்ந்த இடம் நிம்மதியும் மகிழ்ச்சி மைந்தா. 
மகிழ்ச்சியும் ஆனந்தமும் எண்ணில் அடங்கா. மாந்தரெலாம் தேடி வருவார். 
தனக்குள்ளே பல ஆற்றல் தந்துவிட்டேன் தரணியில் என் பணியை நீ பார்ப்பதால்.

17.10.2010

வழிபாடும் பூஜையும் செய்வாய் நன்றாய். தாழ்வு ஏது உந்தன் பூஜை தன்னில். தர்மமும் தவமும் சேர்த்து காண்பாய். 
கனக்காகத்தான் என் பெருமை உலகுக்குக்கு ஓதி பெருமை பல உலக மாந்தர் அடைய செய்வாய். பேரானந்தம் உன்னாலே அடைந்தேன் பலவாறு. அடையோகம் தன்னில் கிட்டும் சக்தியெல்லாம் அவை அனைத்தும் தவமொடு வழிபாட்டில் பெறுவாய். 
நீ உன்னுள் பலர் இருப்பதுபோல் நான் என்னுள் பிரபஞ்சம் உள்ளது அப்பா. அவனியிலே எதை நினைத்துப் பூஜித்தாலும் அடுத்தகணம் அதுவாய் மாறி ஆசி ஆசி அதும் அளிப்பேனே உந்தனுக்கு. 
உடையதொரு இது சூக்குமம் கணபதி தாசர் உயர்வாக உரக்க சொன்னார் எந்தன் மூலம். 
எந்தனின் பிள்ளை என்ற காரணத்தால் எற்றேனே கணபதியின் கட்டளை தன்னை. சுந்தரனே உனக்கு உரைப்பேன் அது சூக்குமம் தன்னை. சுருதி உள்ள எந்தனுக்கு சதுர்த்தியில் பூஜை பூஜை தன்னில் கணபதி மூர்த்தியாய் நினைத்துப் பூஜித்தாய் முழுமையாய் ஏற்றேன். அன்று மாசிலா உண்மை அறிந்து பூஜை மகன் நீயும் செய்வாயே நீயும் உலகில்.
அருந்தவம் தர்மம் செய்த பிள்ளை அதனால் கிட்டியது புண்ணியம் உனக்கு.
என் அருளால் பூரணமும் பரிசுத்தம் காண்பாய் பொற்பதமாய் நான் உந்தன் இல்லில் இருக்க.

19.4.2011

அஞ்ஞான நிலை நீங்கி மேய்த்திடம் காண பற்று  அற்று எந்தனுக்கு பூஜை தன்னை பக்குவமாய் முழுமதி நாளும் தோரும் நாள் நாளும் செய்வதை கண்டு வியப்பேன். நாலு மாந்தர் இருந்தாலும் நலமோடு பூஜை நாயகனே செய்வாயே மகிழ்ச்சி அப்பா. 
நாள் நாளும் நேரமும் காலம் பாரா நாயகனே உன் இல்லம் நான் வாசம் செய்யக் கள்ளமில்லா தெளிவு நிலை பெறுவாய் திண்ணம். 
நல்லபடி சித்தர்களின் நாமம் தொழுது நிறைவாகச் செய்யும் பூஜை தனை  ஏற்றோம்.
ஏற்றோமே நிறை குறை தனையும் தான்.
ஏதுக்குறை தான் செய்யும் தொண்டு தான்.
சிறப்புடனே சித்தர்களும் திகைக்கும் படி செய்யும் பூஜை தன்னால் மகிழ்ந்தோம் நாங்கள்.
மகிழ்ச்சியும் மாந்தர்கும் தன் குடி காண மகத்துவமான தொரு எந்தன் மூலம் இகபரத்தில் ஓதிடுவேன் நாளும் சொல்ல. 
இக மாந்தர் தனக்குமே ஓத சிறப்பு.
சிறப்பு தரும் யாவருக்கும் நலமே திடம் தான் சிக்கல் இல்லா வெற்றிகளும் தேடி வருமே. அற்புதங்கள் அதனாலும் ஆனந்தம் நிலைக்கும் அறிவிக்க ....



.. என ஓதி வழிபாடு பூஜையும் செய்ய ஏகாந்த நிலை நிலைக்கும் உலகுதன்னில். ஆனந்த ஜோதியும் தன்னுள் மிகுந்து அருள்ஜோதி தன்னை நீ கண்டு வியந்து போவாய்.

9.8.2011

ஓடோடி வந்தேன் உன் இல்லம் தன்னில். கண்டதொரு கன்மம் எல்லாம் நான் சுமந்து கருணையுடன் வாழவைப்பேன்.
ஆனந்த நிலை இப்போ அடைந்திருக்கிறாய். அருள் ஜோதி நிலைபெருகி உள்ளது அப்பா.
உலகுதன்னில் உன் பெயரும் உன் தாதை பெயரும் உலகில் ஓத பல மாந்தர் புரியும் வண்ணம் வாழ்ந்திடுவாய். 
தக்கதொரு தானமும் தர்மமும் செய்து தரணிதன்னில் வாழ்க்கை தன்னை மேம்படுத்தச் சுத்தமுடன் சுயநிலைதான் ஏற்கா பொது நிலையிலிருந்து தான் வழிபாடு செய்வாய்.
செய்து வரும் வழிபாடு தன்னில் மேலான மகிழ்ச்சியே எங்களுக்கு உண்டு நித்திய சுகம் காண்போம். 
தக்கதொரு அகத்தீசன் நாமம் தன்னை தான் ஓதி ஓதியே உருவும் ஏறி ஓதாத காலத்திலும் ஓதி கொண்டிருக்க உத்தமத்தை அடைத்திருக்கின்றாய் அதனால் தானே. 
விளம்பலாம் சித்தாந்த மார்க்கம் தொட்டு வின்னமிலா நிலை பலதும் அடைந்துவிட்டாய். 
ஒப்பிலா ஆனதாம் அடையுமாறு ஓதிடுவாய் உயர்வான பூஜை முறைகள். உரு ஏற்றி உரு ஏற்றி உயர்வடைய செய்வாய். 

26.11.2011

சுத்தமுடன் சித்தர் வழி  சமயம்பற்றிச் சுருதியாய் வாழ்ந்துவரும் என் மைந்தனுக்கு ஆசி. 
தரணி தன்னில் எங்கள் வழி மார்க்கத்தில் தப்பாது பூஜையும் தவம் செய்து தான் உயர்வு அடைந்திட்ட பாலகன் நீ.

16.1.2012

உற்றதொரு அற்புதங்கள் அதிசயங்கள் உவந்து செய்த பூஜையில் கண்டு வியந்தேன் பொதிகை முனி யான். உற்றதொரு உயர்வுகளும் இதன் பின்னும் கான  தான்  உத்தமமாய் வழிபாடும் நாழி ஒன்று .....

சித்தர் பூஜை தன்னை செய்து வருவாய். முக்காலமும் உணரும் சக்தி பெற்றிடுவாய். வையகத்தில் வாக்கு மாறா வழிபாடு செய்து ஆண் நீயும் பெருநிலை அடைந்துவிட்டாய். தன் இல்லம் தன்னில் வாழ்ந்து வாழ்ந்து தான்  நிறைவு அடைந்து விட்டேன் பலவாறாய். தான் இங்கு நிரந்தரமாய் இருந்து வரப் பரிபூரண நிலையை நான் அடைந்தது போல் பார் உலகில் நீ அடைவாய். தான் தவநிலை தன்னில் அமர்ந்தவாறு வந்ததொரு இடமில்லை உந்தன் இல்லம். பக்குவமாய் செய்த்திட்ட பூஜை தன்னில் ஆனந்தம் தான். ஏற்று கொண்டோம் ஆகமங்களை.