Wednesday 15 March 2023

THE READINGS CONTINUE

30.1.2018 by Lord Muruga

சண்முக ஆவுடையப்பன் உலகத்தில் தர்மம் செய்யத் தோன்றிய பிள்ளை. மென்மையாய் உன் இல்லத்தை என் இல்லம் ஆக்கினாய். மைந்தனே உன் இல்லில் நான் இருக்கின்றேன். இருந்து உன் பூஜைகளை நித்தம் ஏற்கின்றேன். என்னுடைய பெருமைகளைப் பேசிப் பேசிப் பிறர் செவியில் என் நாமத்தை உறைகின்ற மகனே உன் உயிரில் அல்ல நான் கலந்துவிட்டேன், மைந்தனே உன் உணர்வில் கலந்து இருக்கின்றேன். நல்லதொரு உயிர் முச்சியில் கலந்து இருக்கின்றேன். கண்டு கொண்டேன் உன் உருவில் என் உருவத்தை. சேர்த்து நீ அகத்தியரை வைத்துக் கொண்டாய். செப்புகின்றேன் அகத்தியர் வேறு நான் வேறு அல்ல. எனக்கு நிகர் ஈஸ்வர பட்டம் பெற்றார். எந்தனுக்கே ஈஸ்வர பட்டம் இல்லை. எந்தனுடைய சீடனுக்கு ஈஸ்வர பட்டம். இருவரையும் இரு கண்ணாய் பார்க்கின்றாயே. என்ன சொல்ல உந்தன் அன்புக்கு நிகராய். என்னையும் கட்டிவிட்டாய் அன்பினாலே.

ஈடு இணை இல்லாத தர்மம் செய்கின்றாய். தர்மத்தின் வழி செல்லும் சண்முகநாதா. நான் உன்னை சண்முகநாதா என்கிறேன். தான் எனக்கு அந்த நாமம் உலகில் உண்டு. உண்டான அப்பேரை உந்தனுக்கு தந்தேன். இப்போது நான் உன்னைச் சண்முகநாதா ஆவுடையப்பா என்று அழைக்கின்றேன். 

சத்திய நெறியில் நீ வாழ்வதைப் பார்த்தேன். உன்னுடைய இல்லத்திற்குச் சித்தர்களை அழைத்து ஒவ்வொரு நாளும் வந்து பூஜையை ஏற்கின்றேன். உன் அகத்தால் செய்யும் தொண்டை மனம் உவந்து பூரணமாக ஏற்கின்றேன்.  அவள் எந்தனுக்கு அமுது படைக்கும் அன்னை ஆவாள். ஈரேழு லோகத்துக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், அகத்தியருக்கும் அமுது படைக்கும் அன்னை ஆனால். படை வீட்டைத் தமிழகம் சென்று காண வேண்டாம். பாடுகின்றேன் இந்நாளில் உன் வீடு படைவீடாகும். ஆக இந்த நிலையில் தான் வைத்திருக்கின்றாய். ஆறுமுகனை அகத்துள் சிறை பிடித்து வைத்தாய். சிறைபிடித்து சிந்தையில் ஞானத்தை நிறுத்திச் செந்தில்வேலன் என்னையும் ஆட்கொண்டாய். 

இந்த மலயம் அதில் உந்தனுக்கோர் தொண்டர் படை அமைப்பேன். உன்னைச் சுத்தி உனக்குப் பிறக்காத பிள்ளைகளை உனக்கு நான் அமைப்பேன். அப்பா அப்பா என்று உன்னை அழைக்கும் வண்ணம் மாற்றுவேன். 

அன்புறுக அனந்த ஜோதி காட்சி நான் தருவேன். நான் ஆறுமுகம் கொண்டவன். உன்னுடைய நெற்றியில் என்  ஆறு பட்டை தெரியும். உன் நெற்றியில் பட்டையாக விளங்கி அடுத்தவர்க்குக் காட்சி தருவேன் அப்பா. என் வேல் இக்கணம் முதல் உனக்குத் துணையாய் நிற்கும். ஈசானரும் அம்மையும் வந்து நிற்பார். என்னை அழைக்கும்போது தேவரும், மூவரும், அம்மை அப்பரும், பிரம்மரும் வாணியும், திருமாலும் திருமகளும் நாயகனே உன் இல்லம் தேடி வந்து அமுது உண்பார். 

இந்த மண்ணில் அன்னபூரணி எனும் பட்டத்தை உன் அகத்தாலுக்கு நான் தந்தேன். அவள் கரத்தால் யான் உண்டேன் நீ அறியமாட்டாய்.  மெய்யாக அன்னபூரணியாய் இப்பிறவி தொட்டு மைந்தனே உன்னோடு இணைத்து மோட்ச நிலை பெறுவாள். இருவருக்கும் யான் காட்சி தருவேன். இருவரையும் கரம் பிடித்து அழைத்துச் செல்வேன். முன்னை வினை முழுதும் அழித்து நிற்பேன். முக்தியை உமக்கு அளித்து அனைத்து கொள்வேன். என்னுடைய பாதத்தில் உனக்கு இடம் உண்டு. இல்லவளை அழைத்து வர அனுமதி தந்தேன். 

அகத்தியரும் நவகோடி சித்தர்களும் அற்புதமாய் உன் அகத்தில் தங்கி உள்ளார். ஒன்பது கோடி மகான்களும், அகத்தியரும் உன் இல்லத்தில் நிரந்தரமாகத் தங்கி உள்ளார். தங்கியதால் உன்னை நாடி நித்தம் மாந்தர் வருவார். தயவுடனே அவர் தமக்கு வழி காட்ட வேண்டும். மன்னவனே அமுதளித்து, பசி ஆற்றிவிட்டு, மனதிற்கு நிம்மதியை என் பெயரால் சொல்கின்றாய் செவி குளிர கேட்கின்றேன். வேல் வந்து காலனை விளக்கி நிற்கும். படை வீட்டில் காணாத இன்பம் நின் அகத்தில் காண்கின்றேனடா சண்முகநாதா. உன்னுடைய அகம் என் இல்லம் ஆகும். கருணை நிறைந்த என் இல்லத்திற்கு வந்து விட்டால் அவர் குறை நீக்குவேன். நின் பாதம் வேர் அல்ல என் பாதமாகும். மன்னவனே அனுமதி நீ தர வேண்டும் அதற்கு. மைந்தனே நான் உன்னை சண்முகநாதானாக மாற்றிவிட்டேன். சார்ந்து வரும் அன்பர்கட்கு அன்பளிப்பாய். என் அருள் அகத்தீசர் அருள் பூரணமாய் நிற்கும்.  

உன் இல்ல பூஜை இது உலக பூஜை. நன்றாக யாம் வருவோம். தேவர் வருவார். ஞானியர்கள், முக்தர்கள், சித்தர்கள் வருவார். அம்மை அப்பன் வந்து அருளி நிற்பார். ஆகாய மார்க்கமாகச் சித்த கணங்கள் வரும். உன் இல்லத்தில் நடக்கின்ற பூஜையில் உளமார முருகன் யான் இருப்பேன். உன்னைச் சார்ந்து இருந்து என்னைக் காட்டுவேன். என்னை நீ காட்டுகின்ற காட்சி வேறு. 

போற்றி போற்றி வணங்குகின்ற உங்களுக்குப் புண்ணியத்தைச் செய்து வரும் உங்களுக்கு ஆற்றல் பல அளித்து விடுவேன். அருள் மக்களைச் சேர்த்து வைப்பேன் உங்களுக்கு. 

உன்னுடைய ஜாதகத்தை இக்கணம் முதல் மாற்றி விட்டேன். முக்தி அது நீ விரும்பும் காலத்தில் அளிப்பேன். நின் ஆணவம், மாயை, கர்மத்தை, மலத்தை அறுத்து ஜோதியைக் காட்டுவேன். நிர்மல ஜோதியை அகத்தாலோடு காண்பாய். காண்பது எங்களின் விக்கிரகத்தில். உன் இல்லம் தேடி வந்து காட்டுவேன். வள்ளலாரும் வந்திடுவார் உன்னை நாடி. ஜோதியோடு ஜோதியாய் இணைவாய் அப்பா. சுத்த ஆத்ம அதில் இணைத்து ஐக்கியம் ஆகும். அகத்தாலுக்கும் சேர்த்து தான் சொல்லுகின்றேன். நாயகனே தொண்டு செய்ய வருவார் கண்டிடுவார் அவர்களும் கூட முக்தியைத் தான். 

ஜீவனாய் வந்து உனக்கு ஜீவ நாடி சொல்வேன். உந்தனுக்குச் சுழிமுனை திறந்து அற்புதத்தைக் காட்டுவேன் அகத்தலளுக்கும். கண்டு உரைக்க அவள் தவம் செய்ய வேண்டாம். அவள் படைக்கும் அமுது ஒன்றே போதும். 

இது போன்று ஒரு நூலை யாம் வாசித்ததும் இல்லை இனி வாசிக்கப் போவதும் இல்லை. அடியேன் உங்களுக்கு நூல் சொல்லக் கடமை பட்டுள்ளேன். என் ஜீவ நூல் உன் இல்லம் தேடி வரும்,உன் இல்லத்தில் நிரந்தரமாய் நிற்கும்.  

7.10.2018

பட்டற்று எங்களின் மார்க்கத்தில் பக்குவம் பெற்ற பிள்ளை ...

8.10.2018 by Lord Murugan

அகத்துக்குள் இருந்து தான் சொல்வேனே, பேசுவேன், பேசுவேன், பேசிக் கொண்டிருப்பேன். பிதற்றல் என்போருக்குப் பிதற்றல் ஆகும். அதைத் தேவ வாக்கு என்று என்ன தேவ வாக்காய் மாறிப் போகும். என் சீடர் அகத்தீசர் இங்கு இருக்க அரூபமாய், சொரூபமாய் சித்தர்களும் முக்தர்களும் வந்து அருள் பாலிக்க ஆறுமுகன் கட்டளை ஆகும். இந்தத் தேசத்தில் சப்தமின்றி அகத்தியரைப் பலருக்கு நீ காட்டினாய் அப்பா. உன் தொண்டை மெச்சுகிறேன். 

உன்னுடைய இல்லம் தன்னை நாங்கள் எடுத்துக்கொண்டோம் மைந்தனே நீ செய்த தொண்டிற்காகப், புண்ணியத்திற்காக, அன்னத்திற்காக, அகத்தியர் பூஜித்தற்காக. ஆகவே நான் வந்து உன்னிடத்தில் அருள் நூலைச் சொல்லுகிறேன் அறிந்து கொள். அகத்தியர் வனம் அகத்தியர் தபோவனம் ஆகும். பேசுகின்றேன் எங்களின் தபோவனத்தில் பெரும் கருணை கொண்டு தான் அற்புதம் செய்வோம். அதற்குத் தான் மகேந்திரனைப் பயனாக்கிக் கொண்டோம். ஒவ்வொரு நாளும் இனி அற்புதம் செய்வேன்.

9.10.2018 by Lord Murugan

வழி காட்ட முன்னமே தங்கராசு இருந்தார். இப்போது யாம் இருக்கிறோம். வழி காட்டுவோம் பூரணமாக. அகத்தியர் முதல் சித்தர் படை உனக்கு துணையாக இருப்பது உண்மை. 

3.1.2019

கண்ணியங்கள் குறையாது என்னை வைத்து வணங்கிக் கழிக்கச் செய்வாய் மலேயத்தில். மட்டில்லா புளங்காகிதம் கண்டேன். உன் இல்லத்தில் மகத்துவம் பொருந்தியோர் வாசம் செய்கிறாரே. எனக்குச் செய்யும் பூஜை கண்டு மயங்கித் தாவத்தொரும், சித்தர் எல்லாம் தடம் நாடி வந்தோம். தடம் அதனில் அற்புதங்கள் அதிசயங்கள். தடம் பதித்தால் தவம் சித்தி ஞானம் சித்தி.  தப்பிலா தொண்டு, சேவை, பூஜை தன்னில் தவறுப், பிழை, ஏதப்பா மனம் மகிழ்ந்தோம். மண்ணுலகில் உன் கோட்டம் பிரபல்யம் ஆகும். உன்னதங்கள் நிறைந்த கோட்டம் ஆகும். உண்மையும் உயர் சக்தி நிறைந்த தடமே. சொல்லிடவே பூஜை விழா நீ பல செய்து சுத்த சித்தாய் நீ ஆனாய் எங்கள் வித்தே. நல்விதமாய் சக்தி பல உனக்கு உயர்ந்து நாவில் உள்ளே வந்து விழுந்து ஞானம் முக்தி பெற்றாய் அப்பா. தாழ்வில்லா உன் அகம் அகத்தியர் அகம். இங்குதான் விழி திறந்து மாந்தர் சீடர் பார்த்து எல்லை இல்லா ஆனதாம் கொண்டேன் அப்பா. ஆசி உண்டு உண்மையுள்ள சீடர்களுக்கு. அருள் உண்டு சார்ந்து தொண்டு செய்வோருக்கு. 

5.9.2019

என்  ஜீவ சக்தி பெற்ற மைந்தன் சண்முகம் அறிய வேண்டி வையகத்தில் ஜீவ ஆசி உரைப்பேன். கண்டு கண்டு குளிரும் வண்ணம் புளங்காகிதம் கலியிலே யோகா ஞானம் காண வந்தோன். உண்மையெல்லாம் நிறைந்திட்ட தேகம் அப்பா. உன்னிலே ஜீவமாய் இருக்கின்றோம் அதனால். மும்மலங்கள் அற்ற தேகம் என்பதாலே முக்கண்ணும் முறை திறந்து, உட்சியும் திறந்து, குண்டலினி உயர்ந்து தான் கனல் எழும்பி அமிர்தத்தை இடைவிடாது உண்டு கொண்டு இருக்கிறாய். ஆனந்தம் ஆனந்தம் அதுதான் என்போம். 

நீ உள்ளே அமைதியுடன் இருந்து தான் ஆர்ப்பாட்டம் இல்லது பூஜை செய்வாய். இருந்து வரும் என் தடம் ஜீவ சக்தி நிறைந்தது. தேவர்களும் ஞானியர்களும் தடத்தில் ஆனந்தம் கொண்டிருக்கின்றார். முனை திறந்து பேசி நிற்போம் நாங்களும் தான். உன்னுள்ளே நாங்களும் இருந்தவார் உபதேசம் அளிப்போமே பலவாறாக.  நீ உரைக்கும் வார்த்தை எல்லாம் எங்கள் சிந்தை அப்பா. எங்களின் சித்து விளையாட்டு என்போம். தேகத்தில் தேவர்கள் பல குடி கொண்டிருக்கிறார். உன்னிலிருந்து நாங்கள் மாந்தருக்கு நல் ஞானம் அளிப்போம். தேடி நாடி ஓடிய ஞானம் ஏது இருக்கிறது. 

தான் நீயும் ஜீவ முக்தி அடைந்துவிட்டாய். ஜீவனும் எங்களோடு கலந்தது அப்பா. நீ வேறு நான் வேறு இல்லை என்போம். உன் சிந்தைதனில் தொடர்ந்து நாங்கள் இருப்போம். தெய்வீக நிலையிலே நீயும் இருக்கப் பற்று அற்று நிலையிலே இருக்க யோகம் அற்புதங்கள் அதிசயங்கள் பல இனி உண்டே. காணாத காட்சியெல்லாம் கண்டு கலிப்பாய். உண்டான தேகத்தில் நாங்கள் சூழ்ந்திருக்கத் திகைக்கும்படி யோகங்கள் தொடர்ந்து உண்டு. 

24.12 2019

இல்லமலலைகள் நீ காட்டும் வழியே பின்பற்றி நடப்பார் தானே. அசுத்த தேகம், சுத்த தேகமாகி, பிரணவ தேகமாகி, ஒளி தேகமாகும் வித்தையே ஞானமாகும். அதற்குத் தியானத்தில் வாசியைக் கவனி. மெல்ல மெல்ல அட்டமாசித்திகள் உந்தனுக்கு கூடும் தானே. 

If all the above revelations do not induce seekers to worship the Siddhas, I don't know what would.