Wednesday 15 March 2023

THE PLAIN TRUTH

I had tried everything written in the books. I would put to practice the Yoga postures and breathing techniques that I read. If it was food, my wife would prepare it. So when I came to Agathiyar it was easy to adhere to his directives. Today I stand witness to the richness of the Siddha path and what it has to offer. Though Agathiyar had only recently asked me to share what went on within me, he had given hindsight and predictions, verified and confirmed the numerous changes in my mindset and body, giving me numerous practices and encouragement all along.

Basically, it goes like this. Worship the Siddhas and we become one, he says. It is as simple as that. How much simpler can they have it made for us?

21.9.2014

சேமமுடன் தொண்டு சேவை எந்தனுக்கு சித்தமுடன், சுத்தமுடன் செய்யும் சித்தன் நீ தான். சித்த நிலை, பூஜை நிலை செய்விக்கும் காலம் சித்தர் எல்லாம் இறங்கித் தான் இருக்கிறோம் உன்னுள். பார்  அதுவும் மகிழ்கின்றதே உன் சேவையால். பழுதில்லை சித்தர்களின் புகழும் தன்னை பங்கமில்லா எடுத்து ஓதி சேவிப்பாயே.

நிரந்தரமாய் அமர்ந்து விட்டேன் உன்னிடத்தில். தவம் செய்யும் சாலையே தன் இல்லம் அப்பா. தவமான ஓய்வு நிலை அங்கும் கொண்டேன். பிழை ஒன்றும் இல்லாது வழிபாடும்  சேவை பெருமையுடன், பொறுமையுடன் செய்வாய் ஏற்றேன்.

சித்த நிலை தனிலே புகழ் விளங்க ஆர்ப்பாட்டம் இல்லாதொரு நீயும் தான் அடக்கமுடன் தொண்டு சேவை செய்வாய் மகிழ்ச்சி. பல தேசம் தன்னிலிருந்து மாந்தரெலாம் பார்த்துப் படித்து நாடியும் வருவார் தானே. எந்தனின் சேவையை இது உலகில் இட்டமுடன் இருந்து தான் செய்வாய் நீயும். தக்கதொரு பூஜையும் தன் இல்லத்திலே தான் நன்றாய் செய்திடுவாய் எந்நாளும்.

ஓங்கி நிற்பாள் இல்லாள் கூடித் தானே. என் இல்லாள் என்னைப் போல் வாழ்வு உனக்கு இட்டமுடன் அமைந்திருக்கும் இது உலகில். என்  நிலை சம பங்கு பெற்று உள்ளாய்.

தக்கதொரு எழுதிடுவாய் சித்த மார்க்கம் பற்றி. எழுத வைப்போம் சிந்தையில் கலந்து நாங்கள். பிழை ஒன்றும் வாராது பேர் புகழ் நிலைக்கும்.

ஆதாரம் முறையாய் விளங்கி நிற்கும் முருகன் என்று ஓதி நின்றாலே. முக்காலம் உணரும் சக்தி கிட்டிடுமே முருகன் என்று ஓதினால். முக்கண்ணும் திறக்கும் முருகன் என்று ஓதினால். முருகன் என்று ஓதி நின்றாலே மூவினைகள் விலகிய நிலையும்  காணும். 

தீர்க்கமான வழிபாடு செய்து செய்து முனை திறந்து இருக்கிறாய் இப்போது. மேய் ஞான நிலை அடைந்து விட்டாய். சித்தர்களும் துணை இருந்து ஆசி வழங்கி அருள் செய்வோம். மக்களுக்கும் அகத்தாலுக்கும் ஆசியும் அருள் பார்வை அளித்தோம் இப்போது. அவளுக்கு எங்கள் ஆசி பார்வை சக்தி அனுமாரா உண்டுதான். பேரின்ப நிலை அவளும் அடைவாள் பெரும் பாக்கியம் பெற்றவர் இருவரும் தான்.

கண் விழித்து விளையாடும் இல்லம் உன் இல்லம் தானே. பலது ஒன்றும் இல்லை தான் பூஜை தானும். அவனியிலே வழிபாடு பூஜை தன்னை ஆனந்தமாய் செய்திடுவாய் அருளும் செய்வோம். அஞ்ஞானம் விலகிய மேய்  ஞானியாக மென்மையாய் வாழ்ந்து தான் முழுமை காண்பாய் முற்றே. 

28.3.2015

ஜோதியான ஜோதி நிலை அடையும் என் மைந்தன் சுத்தமான என்  வித்து சண்முகமும் அறிய. நெறி தவறா எங்கள் மார்க்கத்தைப் பற்றி நிறைவு நிலை கண்ட எங்கள் மைந்தா. அழியாத மார்க்கத்தை முறையாய் பற்றி அஞ்ஞானம் விலகிய மெய்ஞான பிள்ளை நீ தான். 

நீ உலகில் என் ஜோதியைப் பெற்று விட்டாய். அவனியிலே என் மார்க்கம் பலர் பற்றி வாழ அருள் நிலையாய் தொண்டு செய்த புண்ணியவான் நீயே. புண்ணியங்கள் மனைவிக்கும் மக்களுக்கும் பூரணமாய் அளித்து விட்டேன் உலகம் தன்னில். உண்மையான மார்க்கத்தை உலகிற்கு ஓதி உயர் நிலையைப் பலர் அடைய வைத்தவன் நீயே.

ஐக்கியம் ஆனோம் உன் இல்லத்தில். இல்லமும் ஞான கோட்டமாகி இறை ஞான நிலை அடைவார் வருவோர் எல்லாம். எல்லை இல்லா அற்புதங்கள் அதிசயங்கள் ஏற்றமாய் இருக்கிறது அப்பா இல்லம் தன்னில். இல்லத்தில் எங்கள் துணை வாசம் இருக்க எல்லை தேசம் மாறி உன் புகழ் நிலைக்கும். 

வளமாய் நீ இருந்து தொண்டு சேவிக்க வேலவனை உன்னோடு துணை இருக்கச் சொன்னேன். சொல்லிவிட்டேன் மாணிக்கவாசகனையும், சிவ பெருமான், திருமூலன், நந்தீசரும் அதுபோல். எல்லையில்லா முனிவரின் கருணை பார்வையும் ஏற்றமாய் துணையும் இருக்க அருளும் புரிந்தோம். ஞானக்கோட்டம் தனியாய் அருள் தவம் ஆசி பெற வழிவகுத்தோம். பெரும் குருவாய் திகழ்ந்து ஓங்கி ஞானம் காண ஆசி.

உன் சிந்தை என் சிந்தை இனித்தான் சொன்னேன் உலகிலே. நீ வேறு நான் வேறு இல்லை அப்பா. என்னையும் புளங்காகிதம் அடைய வைத்தாய். புடை சூழ்ந்து கொண்டு உள்ளோம் சேவை கண்டு.

நீ உன்னுள் நாங்கள் எல்லாம் மாறி வந்து திறந்தோமே உட்சியும் உனக்கும் மைந்தா. தேவாதி தேவர்கள் போற்றும் படி தொண்டோடு பூஜைகள் செய்வாய் மகிழ்ச்சி.

28.8.2015

தாழ்வில்லா என் மார்க்கம் தன்னை சார்ந்து தயவோடு தொண்டு சேவை செய்வாய் மகிழ்ச்சி. மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டிருக்கிறோம். மகத்துவமாய் நீ செய்யும் பூஜையைக் கண்டு இகபரத்தில் பலர் தெளிவு கண்டிருக்கிறார். கருணையுடன் கருத்துக்களை உலகிற்குப் பரப்பிக் கருணையான நிலை தன்னை பலர் அடையச் செய்தாய். பொறுப்பான சிந்தையுடன் பூரணமாய் பேசியும் சேவிப்பாய் மகிழ்ச்சி. சித்தர்கள் நாங்கள் எல்லாம் மன நிறைவு கொண்டிருக்கின்றோம் இத்தருணம் தன்னில்.

தேகத்தில் மாற்றங்கள் பெற்று இருக்கின்றாய் தீர்க்கமான பூஜையும் சக்தி தன்னால். சக்தி பல பெருகியே முக்தி நிலை சாகரத்தில் பெற்ற பிள்ளை நீ தான் அப்பா. அகத்துக்குள் அகத்தின் ஜோதி பெருகி அகத்தியன் யான் நிலை அதுவும் காண்கிறாய் மகிழ்ச்சி. மகிழ்ச்சியுடன் உன் உள்ளே நானும் வந்து மன நிறைவாய் புளங்காகிதம் கொண்டிருக்கின்றேன். விரும்பத் தேகத்தில் பல மாற்றம் பல சக்தி கிட்டி தீர்க்கத் தரிசி நிலை அடைந்தாய் நீ தான். இப்போது முனை திறந்து இருப்பாயே  ஆனந்தம் கொண்டோம். ஓதாது ஆற்றலும் கிட்டி வினை போக்கும் சக்தி எல்லாம் உனக்கு இருக்கிறது இப்போது. கணப்பொழுதில் மாற்றங்கள் அடுத்தடுத்து கண்டுகளிக்கப் புகுந்து நாங்கள் புளங்காகிதம் கொள்வோம். 

27.11.2016

நெரித்தவரா மார்கத்தை முறையே பற்றி நிறை அன்பாய் பூஜிப்பாய் மகிந்தோம். ஆசி உண்டு அகத்தாலும் செய்க்கும். அனுமாரா பூஜிப்பாள் என் மகள் அவளே. மாசில்லா மனம் கொண்டு சேவை செய்து மகனே நீ தவ முக்தி அடைந்து விட்டாய். மாசிலா மனம் கொண்ட மாந்தர் சீடர் மனம் அடங்கி ஒதுங்கியே சார்ந்திருப்பார். முதன்மையானவனாய் நாங்கள் உன்னை வைத்தோம். முழுமையாய் அகத்தியரின் மார்கத்தை முறையாய் பற்றி அனுமாரா இருந்திடுவாய் அனுப்பிளையும் ஏதாம். 

பெருமையான என் பிள்ளை மலேயா பூமியில் இருக்க பெருமை கொண்டோம். தவ ஓய்வும் தன் இல்லம் தன்னில் கொண்டோம். மூப்பான பாதையிலே சென்று கொண்டு இருக்கிறாய். முறையோகம் உள்ளதொரு மாந்தர் எல்லாம் முறை நாடி பற்றிக்கொள்வார் ஏற்றுக்கொள்வாய்.

வாக்கிலே நானுமே கலந்து விட்டேன். என் வாக்கு வேறு உன் வாக்கு வேறில்லை. ஆக்கையிலே மாற்றங்கள் பல்விததும் அனுமாரா பெற்றிடுவாய் நீயும் தான். ஞானியர்கள் மாறி மாறிப் பலரும் தான் ஞானமான தேகத்தில் வாசம் செய்வார். தேவாதி தேவர்களும் வாசம் செய்வார் குடியில். ஜீவமாய் அமர்ந்து விட்டேன் உன் இல்லத்தில். 

18.11.2017

அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் மிதந்திருக்குத் திகைக்கும் படி. திருவருளும் தீர்க்கமாய் தேகமெல்லாம் பரவியதே. எங்களைப் போல் பரமானந்த நிலை இப்போது உந்தனுக்கு. சுத்தமுடன் சுகம் அறுத்துச் சுகம் காணும் மெய் அன்பன். அகத்தியர் நிலை உனக்குப் படி படியே அனுமாரா வந்து கொண்டு இருக்கிறது. அவதாரம் அக்கையிலே கண்டு கொண்டோம். அகத்தியர் மார்க்கத்தில் பிரபலியம் அருள் வழி இருக்கிறது அப்பா உந்தனுக்கு. அருள் நிலைகள் பெற்று இருக்கிறார் பல மாந்தரும். மாற்றங்கள் பலர் அடையக் காரணமாய் இருந்தாய். 

தேகமெல்லாம் ஞானிகள் குடி கொண்டிருக்கத் தேவாதி தேவர்களும் வணங்குவாரே. சுத்த  தேகம், சித்த  தேகம், ஞான தேகம் பெற்று குவலயத்தில் ஒன்றுமே தெரியாதவன் போல் அமர்த்திருப்பாய். பக்தியில் தெரிகிறது அப்பா சித்தி, முக்தி, வெற்றி. அகத்தியானின் அருள் பெற்று அகத்தியனாய் வாழ யோகம் உண்டு.